கனடா மக்களின் ஒற்றுமைக்கு இந்தியாவும் துணை நிற்கிறது: பிரதமர் மோடி
புதுடில்லி: கனடா மக்களின் ஒற்றுமைக்கு இந்தியாவும் துணை நிற்கிறது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.
கனடாவில் பள்ளி ஒன்றில் மர்ம நபர் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிக்சையில் உள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்களும், ஆழ்ந்த இரங்கலும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள பதிவின் விவரம் வருமாறு;
கனடாவில் நிகழ்ந்த கொடூர துப்பாக்கிச்சூடு சம்பவம் அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடுபவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் அதில் இருந்து விரைவில் குணம்பெற பிரார்த்திக்கிறேன்.
துக்கமான இத்தகைய தருணத்தில் கனடா மக்களின் ஒற்றுமைக்கு இந்தியாவும் துணை நிற்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
மேலும்
-
சீனா, ஜப்பான், பிரான்சை விட வந்தே பாரத் ஏசி ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு; அஸ்வினி வைஷ்ணவ்
-
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தவறு: சரி செய்து நடவடிக்கை எடுக்க சபாநாயகர் உத்தரவு
-
ரபேல் ஒரு ஹீரோ: நிறைய போர் விமானங்களை இணைக்க திட்டம்; விமானப்படை துணைத் தலைவர் தகவல்
-
வன்முறையாக மாறிய போராட்டங்கள்; மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர்!
-
மும்பையின் புதிய மேயராக தேர்வானார் ரிது தாவ்டே; பாஜவினர் கொண்டாட்டம்
-
கூட்டணி ஆட்சியா, இல்லையா என்பதை ராகுலும், ஸ்டாலினும் முடிவு செய்வர்: செல்வபெருந்தகை