கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்; முதல்வருக்கு காங்., எம்பி பதில்!
சென்னை: தமிழகத்தில் ஆட்சியில் பங்கு ஒத்துவராது என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், ''கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? மக்கள் முடிவு செய்வார்கள்'' என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார்.
இந்தியா டுடே செய்தி சேனல் நிகழ்ச்சியில், ''ஆட்சியில் பங்கு தமிழகத்திற்கு ஒத்துவராது என்பது எங்களுக்கும் தெரியும். அவர்களுக்கும் தெரியும். இடையில் சிலர் குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டு சதி செய்கின்றனர். கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா என்பதற்காக சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர்'' என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், '' கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். 2006ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் (காங்கிரஸ்) தவறு'' என குறிப்பிட்டுள்ளார்.
தொடரும் மோதல்
காங்கிரஸ் அதிக தொகுதியில் போட்டியிடும். ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதை காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தொடர்ந்து கூறி வருகிறார். தற்போது ஆட்சியில் பங்கிற்கு வாய்ப்பில்லை என்று கூறி சர்ச்சைக்கு முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்த சூழலில், முதல்வர் ஸ்டாலினுக்கு கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். இதன் வாயிலாக, காங்கிரஸ் எம்பி மீண்டும் சர்ச்சையை தொடங்கி உள்ளார். திமுக- காங்கிரஸ் கூட்டணியில் மோதல் நீடிக்கிறது என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.
மாநில உரிமை பேசுவதாக சொல்லும் திமுக .....மாநில உரிமைகளை பறித்த காங்கிரஸோடு கூட்டணி வைத்து இருப்பது எவ்வளவு முரண் ?? இதுதான் மக்களை முட்டாளாக்கும் செயல்....
காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நிபந்தனையை ஸ்டாலின் நிராகரித்த பிறகு அமைச்சரவை பங்கு என்ற இரண்டாவது நிபந்தனையும் தானாகவே இல்லை என்பது உறுதி ஆகி விட்டது. இனி மீதமிருப்பது தொகுதி எண்ணிக்கை அதிலும் தங்களது காங்கிரஸ் மானத்தை இழக்க தான் போகிறது. எனவே அவர்களிடம் உள்ள ஒரே மாற்றுவழ த.வெ.க. வின் பக்கம் கூட போகாமல் தைரியத்தோடு தங்கள் தலைமையில் சில கட்சிகளை அழைத்து ஒரு கூட்டணியை அமைக்க முயற்சிப்பது தான். அப்போது தான் தமிழகத்தில் மற்ற கட்சிகளிடமும் மக்களிடமும் காங்கிரஸ் கட்சிக்கு என்ன மரியாதை இருக்கிறது என்பது தெளிவாகி விடும்.
கொடுத்த காசுக்கு நல்லாவே வேலை செய்றாரு . இவர் பேச்சை கேட்ட காங்கிரஸ் தமிழ்நாட்டில் அஸ்தமனம் ஆகும்
மக்கள் அளித்த முடிவை மாற்றும் திறன் கொண்டது திமுக . காங்கிரஸ் இயக்கம் பெரும்பாரம்பரியம் கொண்ட து . ஆனால் அவர்கள் தும்பைவிட்டு வாலை பிடித்து தொங்குகிறார்கள் . கூலிக்காரர்களைபோல் ஆகிவிட்டார்கள் .காங்கிரெஸ் இயக்கம் மத்தியில் ஆண்டபொழுது இப்படி சொல்லி இருக்கலாம் . அப்படி செய்யாமல் அவர்களை மிகப்பெரிய பொறுப்பில் வைத்து அழகுபார்த்தது மட்டுமில்லாமல் கொள்ளை அடித்து அவர்களே அனுபவிக்கவும் விட்டது . நெஞ்சுபொறுக்கவில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிடட்டால் .
அப்படியே அந்த பக்கம் தேமுதிகவை கூட்டணிக்கு இழுக்க பாஜக பேசிகொண்டுள்ளது பற்றியும் சொல்லுங்க . அப்பத்தான் அந்த கூட்டணிக்கு தலைமை இலைக்கட்சி இல்ல, தாமரை கட்சிதான் என்று மக்களும் "புரிந்து" கொண்டு ஒட்டு போடுவார்கள்.
யாரந்த மக்கள் உங்க முதலாளி இத்தாலிய அம்மையார் உங்களை அவ்வளவு எளிதாக பங்கு கேட்கவிடாமாட்டார்.. அதற்கெல்லாம் முதலில் உங்க கூட்டம் ஒரு கணிசமான தொகுதி வாங்கி போட்டியிடவேண்டும் அந்த எண்ணிக்கையிலும் மிக கணிசமான தொகுதி ஜெயிக்கவேண்டும்... வாய்ப்பே இல்லை ராஜா
அடிச்சுக்குறது நீங்க ரெண்டு பேரும். ஆனா பழியைத் தூக்கி பா.ஜ.க மேல போடுவார் குறுந்தொகை!
2026க்கு பின் திஹாரில் வேண்டுமானால் பங்கு கிடைக்கும்.
பேசிக்கிட்டே இருந்தா எப்படி அடிச்சி காட்டுங்க. ஸ்டார்ட் த மியூசிக் .
ஹம் இன்னும் இன்னும் கொஞ்சம் எதிர் பார்க்கிறேன் சத்தம் இன்னும் கொஞ்சம் அதிகமா வரணும்மேலும்
-
மும்பையின் புதிய மேயராக தேர்வானார் ரிது தாவ்டே; பாஜவினர் கொண்டாட்டம்
-
கூட்டணி ஆட்சியா, இல்லையா என்பதை ராகுலும், ஸ்டாலினும் முடிவு செய்வர்: செல்வபெருந்தகை
-
விவசாயிகளைக் கண்ணீரில் மிதக்கவிடும் திமுக; தினமலர் இணையதளம் செய்தியை மேற்கோள் காட்டிய நயினார்!
-
சபாநாயகரை வசை பாடிய காங்கிரஸ் எம்பிக்கள்: கிரண் ரிஜிஜூ திடுக்கிடும் தகவல்
-
பாஜ தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு
-
தமிழகத்தில் திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது: நயினார் நாகேந்திரன்