சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு வாலிபர் கைது

சிவகங்கை: இளையான்குடி அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, ராஜாவை 27, போலீசார் கைது செய்தனர்.

சாலைக்கிராமம் பகுதியில் சிறுமிகளுக்கு இளைஞர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு புகார் சென்றது. விசாரணையில் அக்கிராமத்தை சேர்ந்த 3 க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தது தெரிந்தது.

குழந்தைகள் பாதுகாப்பு மேற்பார்வையாளர் சரவணன் புகாரில், சாலைக்கிராமம் இன்ஸ்பெக்டர் பாலமுரளி கிருஷ்ணன், அக்கிராமத்தை சேர்ந்த ராஜாவை கைது செய்தார்.

Advertisement