விருதையில் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்: விருத்தாசலம் ஒன்றிய அலுவலக வாசலில், தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், தம்பிதுரை தலைமை தாங்கினர். ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் அருளழகன், நிர்வாகிகள் அருண், மணிவண்ணன், தங்கராசு முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சந்திரகுமார் வரவேற்றார்.

முன்னாள் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, பா.ம.க., மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாநில மகளிரணி செயலாளர் தமிழரசி, பா.ஜ., தொகுதி பொறுப்பாளர் மணிகண்டன், அன்புஜோதி, அ.ம.மு.க., சீனிவாசன், த.மா.கா., அசோக்குமார், ஐ.ஜே.கே., பார்த்தசாரதி உட்பட தே.ஜ., கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

Advertisement