தேர்வுகள் முடிந்தவுடன் மாணவர்களை கீழடி அருங்காட்சியகத்திற்கு அழைத்து வாருங்கள்; பெற்றோர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
சென்னை: தேர்வுகள் முடிந்தவுடன் மாணவர்களை கீழடி அருங்காட்சியகத்திற்கு பெற்றோர் அழைத்து வருமாறு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
,இதுகுறித்து அவரது எக்ஸ் வலைதள பதிவு;
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் திறப்பு; தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களைப் பெற்றோர் அழைத்து வாருங்கள்.
கீழடியின் பானை ஓடுகளில் நாம் கண்டெடுத்த தமிழி எழுத்துகள், கடல் கடந்து, எகிப்து நாட்டின் பிரமிடுகளிலும் இடம்பெற்றுள்ள மகிழ்ச்சியை மேலும் பெருக்கிடும் வகையில், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்திருக்கிறேன்.
ராமநாதபுரம் - நாவாய், ஈரோடு - நொய்யல் அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.
தமிழர் தொன்மையின் தடங்களைத் தேடித் தேடிக் கண்டறிந்து உலகுக்கு அறிவிப்போம். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தெற்கில் இருந்தே எழுதுவோம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த பதிவில் கூறியுள்ளார்.
போக வர தங்க உணவு செலவு யார் தருவது. வீடியோ எடுத்து பள்ளிகளில் போடுங்கள். போதும். போய் பார்த்தாலும் ஆதியும் அந்தமும் இல்லாத சில ஓட்டு சிலுகளால் என்ன பலன் கிட்டும்?
தமிழன் பெருமைய தமிழன் பேசணும் ......
அனுமதி இலவசமா????
தேர்வுகள் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. கோடை விடுமுறையும் இப்போது இல்லை. இப்போதே ஏன் கீழடிக்கு மாணவர்கள் வர அழைப்பு விடுக்கிறார் முதல்வர்?
கட்சியையும் அங்கு கண்டு மகிழலாம்
2023 ஆம் ஆண்டு சீர்காழி சட்டைநாதர் கோயிலில் மேற்கு கோபுர வாசல் அருகே சுமார் 2 அடி ஆழத்தில் 23 உலோகச் சிலைகள், 410 முழுமையான செப்பேடுகள், 83 சேதமடைந்த செப்பேடுகள், பூஜைப் பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இவை 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை....திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் செப்பேடுகளில் பதிப்பிக்கப்பட்டது முதன்முதலாக இங்குதான் கிடைத்துள்ளன. ...இது பற்றி பள்ளி பாடத்தில் மாணவர்களுக்கு இங்குள்ள விடியல் அரசு சொல்லி தராது .....அப்படி சொல்லி தருவது விடியல் மதம் மாற்றும் கும்பலின் சமூக நீதி மத சார்பின்மைக்கு விரோதமானது .....
ஆமாம் பெற்றோர்களே. தயவு செய்து அழைத்து வாருங்கள். மோடி அரசை மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். என்று சாட வேண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் வந்தால் அதை வைத்து நாங்க பீலா வுடுவோம். ஆனால் ஆதிச்சநல்லூர் க்கு மட்டும் போக விடாதீர்கள்.
தேர்தல் முடிவுகளுக்கு பின் ஓய்வில் தான் இருப்பீர்கள். . வாரம் இருமுறை கூட கீழடி சென்று பொழுதை போக்குங்கள்.
கீழடியிலிருந்து ஆதிச்சநல்லூர் 200 கிலோமீட்டர் தூரத்திற்கும் குறைவுதான் .....ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழி உள்ளது ...இறந்தவர்கள் தாழியில் புதைக்கும் போது அவர்கள் பயன்படுத்திய பல பொருட்கள் சேர்த்து புதைத்துள்ளார்கள் ....அதில் பல வழிபாடு சிலைகள் உள்ளது ....அதை இந்த விடியல் மதம் மாற்றும் கும்பல் மறைத்து தமிழனுக்கு மதம் இல்லை என்று உருட்டுவானுங்க ...
இல்லை திருவாரூர் ரயில்வே ஸ்டேஷன் அழைத்து செல்லுங்கள் திராவிட மாடல் பிறந்த இடம் திருவாரூர் ரயில்வே ஸ்டேஷன்
விடியல் இன்னைக்கு சொல்லிட்டார் இனிமேல் தான் திராவிட மாடல் 2 னு,மேலும்
-
நயினார் பேசியது ஏற்புடையது அல்ல: திருமா கருத்து
-
காங்கிரஸ் பொதுச்செயலர் வரும் 17ல் சென்னை வருகை
-
அடுத்த ஐந்தாண்டுகளும் கொள்ளையடிக்க திட்டம்
-
உண்டியலில் கைவரிசை அறநிலையத்துறை அவசியமா?
-
தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரை சூட்ட உத்தரவிட முடியாது: ஐகோர்ட்
-
விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தை: உறுப்பு தானத்தால் 5 பேருக்கு கிடைத்தது மறுவாழ்வு