ரஷ்யா - உக்ரைன் தண்ணி காட்டுகின்றன; அமெரிக்க அதிபர் புலம்பல்
வாஷிங்டன்: உலகளவில் எட்டு போர்களை சுலபமாக முடித்து வைத்த எனக்கு, ரஷ்யா - உக்ரைன் போரை முடிப்பது மட்டும் பெரும் சிரமமாக இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான், தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து- கம்போடியா உட்பட எட்டு போர்களை நிறுத்தியுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து தம்பட்டம் அடித்து வருகிறார். இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என்றும் அவர் கூறி வந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறியதாவது: நாங்கள் உலகம் முழுதும் அமைதியை கொண்டு வருகிறோம். நான் வெறும் 10 மாதங்களில் எட்டு போர்களை சுலபமாக முடிவுக்கு கொண்டு வந்தேன். இன்னும் சில உள்ளன; அதில் குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் போர் மிகவும் சிக்கலானது. நான்கு ஆண்டுகளைக் கடந்தும் போர் தொடர்கிறது.
இதில் ஒரு தரப்பு மட்டும் அமைதியை விரும்பினால் போதாது, ரஷ்யாவும், உக்ரைனும் இணைந்து ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே அமைதிப் பேச்சு வெற்றி பெறும், என்று குறிப்பிட்டார். ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் அமெரிக்கத் தரப்பு தலைமையில், ரஷ்யா - உக்ரைன் இடையே புதிய பேச்சு தொடங்கவுள்ள நிலையில் டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.
உப்பைத் தின்றவன் தண்ணி குடிப்பான் பழமொழி குடித்துத் தான் தீரவேண்டும்
உலகத்தில் பல போர்களை முடித்து வைத்ததாக கூறும் ட்ரம்ப் ஏன் ரஸ்யா , உக்ரைன் போரை முடிக்க முடியவில்லை ? ஏன் என்றால் இவர் எந்த போரையும் முடிக்கவில்லை, அதுவாக முடிந்தது, இந்தியா பாக்கிஸ்ட்ன் உள்பட. பாவம் இவர் தான் முடித்ததாக கூறி உலக கேலி பொருளாகி விட்டார். இதில் இன்னும் வேடிக்கை, அதை அவர் இன்னும் உணராமல் மேலும் மேலும் கூறுவது மிக பரிதாபம்.மேலும்
-
' ரூ.5,000 வழங்கியதால் வெற்றி உறுதி இனி ஆட்சியில் பங்கு கேட்க மாட்டார்கள்' :தெம்பாக பேசுகிறார் ஆர்.எஸ்.பாரதி
-
நயினார் பேசியது ஏற்புடையது அல்ல: திருமா கருத்து
-
காங்கிரஸ் பொதுச்செயலர் வரும் 17ல் சென்னை வருகை
-
அடுத்த ஐந்தாண்டுகளும் கொள்ளையடிக்க திட்டம்
-
உண்டியலில் கைவரிசை அறநிலையத்துறை அவசியமா?
-
தெருக்களுக்கு குறிப்பிட்ட பெயரை சூட்ட உத்தரவிட முடியாது: ஐகோர்ட்