டூவீலர் மீது மோதிய கார் விவசாயிகள் இருவர் பலி

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் விவசாயிகள் இருவர் பலியாகினர். முத்துலாபுரத்தை சேர்ந்த விவசாயி அழகுமலை 60. இவரது உறவினர் பூசாரிபட்டியைச் சேர்ந்த முனியாண்டி 60.இருவரும் விவசாயிகள்.

இவர்கள் டூவீலரில் சென்றபோது முத்துராபுரம் ரோட்டில் இருந்து திண்டுக்கல் ரோட்டில் திரும்பினர். அப்போது கார் மோதியதில் துாக்கி வீசப்பட்ட இருவரும் பலியாகினர். பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தினால் திண்டுக்கல் -- குமுளி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement