யாரையும் நம்பக்கூடாது: திருமணத்துக்கு முந்தைய உறவு குறித்து சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
புதுடில்லி: திருமணத்துக்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் உடல் ரீதியில் உறவில் ஈடுபடுவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
திருமணம் செய்து கொண்டு உறவில் ஈடுபட்டு ஏமாற்றியதாக டில்லியை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் கைதான நபர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிவி நாகரத்னா மற்றும் நீதிபதி உஜால் புயான் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:நாம் பழைய நாகரீகத்தை பின்பற்றுபவர்களாக இருக்கலாம்.
அதேநேரத்தில் திருமணத்துக்கு முன்பு ஆணும் பெண்ணும் முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள். அவர்களின் உறவானது எத்தகைய வலிமையானதாக இருந்தாலும் சரி. திருமணத்துக்கு முன்பு அவர்கள் எப்படி உடல் உறவில் ஈடுபடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள கொள்ள முடியவில்லை. நாம் பழைய பாணியில் இருந்தாலும், அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். திருமணத்துக்கு முன்பு யாரையும் நம்பக்கூடாது என நாகரத்னா தெரிவித்தார்.
காமவெறியில் இந்த கால இளைஞர்கள் ஏதேதோ தவறு செய்கின்றனர். பிறகு பிரச்சினை ஏற்பட்டவுடன் நீதிமன்றங்களை அணுகி தீர்வு காண முயல்படுகின்றனர். பெற்றோர்களின் வளர்ப்பு சரியில்லை இந்த காலங்களில். வளர்ப்பு சரியாக இருந்தால், இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாது.