மகளிர் உரிமைத் தொகை எடுக்க வங்கியில் குவிந்த பெண்கள்
மானாமதுரை: மானாமதுரையில் மகளிர் உரிமைத் தொகையை கூட்டுறவு வங்கியில் எடுப்பதற்காக அதிகமான பெண்கள் கூடியதால் வங்கி கதவை மூடியதைத் தொடர்ந்து தள்ளுமுள்ளு, வாக்கு வாதம் ஏற்பட்டது.
அரசு சார்பில் பிப். 13ம் தேதி மாதம்தோறும் வழங்கக்கூடிய மகளிர் உரிமை தொகையை பிப்., மார்ச், ஏப்.,ஆகிய 3 மாதங்களுக்கும் முன்னதாகவே 3 ஆயிரமும், கோடைகால சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரமும் சேர்த்து ரூ.5 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைத்தனர். அனைத்து வங்கிகளிலும் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மானாமதுரை-சிவகங்கை ரோட்டில் உள்ள சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ஏராளமான பெண்கள் நேற்று குவிந்த னர். வங்கி ஊழியர்கள் முன்பக்க கதவை மூடியதால் சிறிது நேரம் பெண்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதோடு தள்ளு முள்ளு ஏற்பட்டது. வங்கி அதி காரிகள் நடவடிக்கை எடுத்து ஒருவர் பின் ஒருவராக சென்று பணத்தை பெற்று சென்றனர்.
மேலும்
-
நக்சல் ஒழிப்பு நடவடிக்கை இறுதி கட்டம்; சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 22 பேர் சரண்
-
பார்க்கும் எல்லா கட்சிகளுடன் கூட்டணி பேசி வருகிறோம்: ஜி.கே.மணி பட்டவர்த்தனம்
-
புதுமை படைப்பதில் உலகுக்கு இந்தியாவே தலைமை: பிரான்ஸ் அதிபர் புகழாரம்
-
எம்ஜிஆர் நடித்த இதயக்கனி: தியேட்டரில் பார்த்து ரசித்த இபிஎஸ்
-
விளையாட்டுக்கு ஒட்டிய வாகனம்... வினையானது ஒரு உயிர்!
-
16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை; ஆஸ்திரேலியாவை தொடர்ந்து பிரிட்டனிலும் திட்டம்