பார்க்கும் எல்லா கட்சிகளுடன் கூட்டணி பேசி வருகிறோம்: ஜி.கே.மணி பட்டவர்த்தனம்
சென்னை: பார்க்கும் எல்லா கட்சிகளுடனும் கூட்டணி பேச்சு நடத்தி வருவதாக, ராமதாஸ் ஆதரவு பா.ம.க., - எம்.எல்.ஏ., ஜி.கே.மணி தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை, பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு பொதுக்குழு வழங்கியுள்ளது. கூட்டணி அமைப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். விரைவில் நல்ல முடிவை சொல்வார்.யாருடன் பேசினோம்; என்ன பேசினோம் என்பதை, தேர்தல் நேரத்தில் ஒரு அரசியல் கட்சியால் சொல்ல முடியாது. முடிவு எட்டப்பட்டதும்தான் சொல்ல முடியும்.
எல்லா கட்சிகளிலும், எங்களுக்கு நண்பர்கள் இருக்கின்றனர். எல்லா கட்சிகளுடனும் பேசி வருகிறோம். அதில் தவறில்லை. சொல்லப்போனால், பார்க்கும் எல்லா கட்சிகளுடன் பேசி வருகிறோம். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி., என, எல்லா கட்சிகளுடனும் பேச்சு நடந்து வருகிறது. முடிவு எட்டப்பட்டதும், அதை ராமதாஸ் அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தலுக்கு தேர்தல் பெட்டி வாங்கியே அரசியலைக் கெடுத்த ராமதாசுக்கு இது தேவைதான்.
எப்படி இருந்த நாங்க இப்போ இப்படி ஆயிட்டோமே.. நம்ம கருணாஸ் கட்சியோடு பேசிப்பாருங்களேன். அவரு தலைமையில் கூட்டணி வைத்தால் நீங்க ரெண்டு பேரும் நாளைய தமிழகத்தை ஆட்சி பிடிக்கும் சாத்தியம் இருக்கலாம்
ஆம் ஆத்மி, தெலுகு தேசம் கட்சிகளிடமும் கூட்டணி பேசுங்கள்.
அன்புமணி பா ம க கிட்ட பேசுங்க. எல்லாமே சரியாகிவிடும்
என்ன பாமகஜி இப்டி ஆகிப்போச்சே...
பாத்து கூட்டணி பற்றி பேசுங்கள் ஐயா. அன்பு மணி கூடையும் கூட்டணி பற்றி பேசிட போறிங்க.
எதற்கும் டிரம்புடன் பேசி பார்க்கவும். இங்கு கிடைக்கவில்லையென்றால் அங்கு போய் நிற்கலாம். என்ன..வரி போடுவார்
இந்த குசும்புதானே வேணாங்கிறது. சிரிக்க வைத்த கமென்ட். நன்றி.
மக்கள் நீதி மையம் கட்சியுடன் நீங்கள் பேசவில்லை என்று அவர் ரொம்ப வருத்தப்பட்டதாக ஒரு துணை நடிகை கூறுகிறார்
விஜய் கட்சி பாக்கி இருக்கிறதே
இதெல்லாம் என்ன?? கொடுமைமேலும்
-
இளைஞர்களின் அரசு வேலை கனவை பறிக்கும் திமுக அரசின் ஆட்சி கனவும் பறிக்கப்படும்; நயினார் நாகேந்திரன்
-
42 தமிழக கட்சிகள் நீக்கம்; தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
-
டில்லியில் களைகட்டியது ஏஐ மாநாடு: பாரத மண்டபத்தில் குவிந்த உலக தலைவர்கள்
-
டி-20 உலக கோப்பை: நெதர்லாந்து அணிக்கு 194 ரன் இலக்கு
-
மணலி மண்டலக் குழுத் தலைவருக்கு திடீர் உடல்நலக்குறைவு: சென்னை மாநகராட்சியில் பரபரப்பு
-
சைதை துரைசாமியின் புகார்கள் கற்பனையானவை: உச்ச நீதிமன்றத்தில் ஸ்டாலின் தரப்பு வாதம்