42 தமிழக கட்சிகள் நீக்கம்; தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
சென்னை: ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை, பதிவு செய்த கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கி, தேர்தல் கமிஷன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.
ஆறு ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என கூறி, நாடு முழுதும் 474 கட்சிகளை, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கி, தேர்தல் கமிஷன், கடந்தாண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதில், 42 தமிழக கட்சிகளும் அடங்கும்.
இதை எதிர்த்து, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட ஏழு கட்சிகள் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களை, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மனுதாரர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்:
முறைகேடாக, மோசடியாக கட்சியை பதிவு செய்து இருந்தாலோ அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருந்தாலோ, பட்டியலில் இருந்து நீக்க அதிகாரம் உள்ளது.
ஆனால், ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற காரணத்தின்படி நீக்க முடியாது. அதற்கு தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இல்லை.
தேர்தல் கமிஷன் தரப்பில் முன்வைத்த வாதம்:
தேர்தல் கமிஷன், ஒரு உயர் அதிகாரம் கொண்ட சுதந்திரமான அமைப்பு. கட்சிகளை நீக்க அதிகாரம் இல்லை என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல. தேர்தலில் போட்டியிடாமல், தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்க வேண்டும் என, எந்த கட்சியும் உரிமையாக கேட்க முடியாது. உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டு உள்ளதால், பட்டியலில் இருந்து நீக்கக் கூடாது என, கூறவும் முடியாது.
நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:
தேர்தல் கமிஷன் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்பதால், இடைக்கால தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இறுதி விசாரணை, மார்ச் 2வது வாரத்துக்கு தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கட்சி நடத்துவதே தேர்தலின்போது பேரம் பேசி தனக்கோ அல்லது தன்வாரிசுகளுக்கோ அரசியல் பதவி பெறத் தானே.
சின்ன சின்ன சிரிப்பு கட்சிகளுக்கு கள்ள தீனி போடும் பெரிய களவாணி கட்சிகள் இதை சாக்காக வச்சிகிட்டு தீனி போடுவதை நிறுத்திட்டா என்ன செய்யுறது. தேர்தல் கமிஷன் இன்னும் ஒரு படி மேலே போய் இவனுங்க வச்சிகிட்டு இருக்கும் பணத்தை புடுங்கி மத்திய அரசு கஜானாவில் சேர்க்கணும். கட்சி கட்டடம் எல்லாத்தையும் கவர்மெண்ட் சொத்தாக்கணும்.
6 ஆண்டுகள் தேர்தலில் போட்டி போடாமல் இருக்கும் கட்சி போர்வையில் சமூக விரோத செயல் செய்ய முடியும். கட்சி பத்திய அதிகாரம் இருக்கு. நீக்க அதிகாரம் இல்லையாம். பின் யாருக்கு அதிகாரம்? விசாரணை முடியும் வரை கட்சி நிதியை தேர்தல் ஆணையம் முடக்க வேண்டும். தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்பை வழக்கறிஞர்கள் விசாரிப்பதை மக்கள் விரும்பவில்லை. கண்காணிப்பு, கட்சி, வாக்காளர், உறுப்பினர் தேர்தல் ஆணைய முழு கட்டுபாட்டில் இருக்க வேண்டும். நீதிமன்ற, மத்திய, மாநில நிர்வாகம் தலையீடு கூடாது.
வெறும் லட்டர் பேடில் இருக்கும் கட்சிகள் எதற்கு? பலவிதமான பரிவர்த்தனைகளுக்கு உதவி பணம் சம்பாதிப்பார்கள். பெரிய கட்சிகளை பயமுறுத்தவும் பயன்படும். ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ஓட்டு பெறாத கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். இப்படி அநியாய சுதந்திரம் தவறு.
காலம்காலமாக ஆட்சியில் இருந்தும், மக்களுக்கு எந்தவிதத்திலும் உதவாத, லஞ்சலாவண்ய ஆட்சிபுரியும் திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கும் தடை விதிக்கவேண்டும்.
ஒரு மா நிலத்தில் அதிகப்படியாக 5 கட்சிகளுக்கு மேல் அனுமதிக்க கூடாது. கட்சி ஆரம்பித்தாலும் 1 கோடி உறுப்பினர் , 10 கோடி ரூபாயும் கொடுக்க வேண்டும்.
அதுமட்டும் இல்லாமல் 50 சதவிகித தேர்தல் செலவு அந்த அந்த மாநிலத்தில் உள்ள மொத காட்சிகளிடம் வசூல் செய்ய வேண்டும்.மேலும்
-
நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும்: ராமதாசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
-
ஈரான் மீது தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டம்; விமானப்படை தளம் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி மறுப்பு
-
ஏஐ தொழில்நுட்பத்தில் இந்தியா அசுர வளர்ச்சி பெறும்; கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நம்பிக்கை
-
8000க்கும் மேற்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைகள்: அப்போலோ மருத்துவமனை சாதனை
-
சுயமரியாதை சீண்டப்பட்டால் முதல் குரல் எழுப்புவேன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யாத முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன? கேட்கிறார் அண்ணாமலை