டில்லியில் களைகட்டியது ஏஐ மாநாடு: பாரத மண்டபத்தில் குவிந்த உலக தலைவர்கள்

3


புதுடில்லி: டில்லியில் பாரத மண்டபத்தில் நடக்கும் ஏஐ மாநாட்டில் பல்வேறு நாட்டு உலக தலைவர்கள் குவிந்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.


இந்தாண்டுக்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாநாட்டை இந்தியா நடத்துகிறது. பிப்.,16 முதல் 20 வரை டில்லி பாரத மண்டபத்தில் நடக்கும் இம்மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாநாட்டில் பங்கேற்கும்படி, பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.


Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
இந்நிலையில் இன்று நடக்கும் மாநாட்டில்

பூடான் பிரதமர் ஷெரீங் டோப்கே

இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே

கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ்

கயானா துணை அதிபர் பாரத் ஜக்தேவ்

பொலிவியா துணை அதிபர் எட்மண்ட் லாரா மோன்டானோ

ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் பெரேஜ்

ஸ்லோவோகியா குடியரசு அதிபர் பீட்டர் பெலேகிரினி

கஜகஸ்தான் பிரதமர் ஓல்ஜஹாஸ் பெக்டேனோவ்

பின்லாந்து பிரதமர் பெட்ட்டேரி ஓர்போா

எஸ்டோனியா பிரதமர் அலார் காரிஸ்

மொரிஷியஸ் பிரதமர் நவின்சந்திரா ராம்கூலம்

சிசெல்ஸ் துணை அதிபர் செபாஸ்டியன் பிளாய்

நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூப்

குரோஷியா பிரதமர் ஆன்ட்ரெஸ் பிளென்கோவிக்

ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனடியோ குட்டரெஸ்

ஐஎம்எப் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். பிறகு பாரத
மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கலை நிகழ்ச்சிகளை தலைவர்கள் பார்வையிட்டனர்.

Advertisement