சைதை துரைசாமியின் புகார்கள் கற்பனையானவை: உச்ச நீதிமன்றத்தில் ஸ்டாலின் தரப்பு வாதம்
- டில்லி சிறப்பு நிருபர் -
'கொளத்துார் தேர்தல் வழக்கில், மனுதாரர் சைதை துரைசாமியின் புகார்கள் அனைத்தும் கற்பனையானவை; ஆதாரமற்றவை' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 2011 சட்டசபை தேர்தலில், கொளத்துார் தொகுதியில், தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி, அ.தி.மு.க.,வின் சைதை துரைசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நடந்து வருகிறது.
இன்றைய விசாரணையில், முதல்வர் ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்கள்:
பணம் கொடுத்ததாகக் கூறப்படும் ஈஸ்வரி மருத்துவமனை எங்குள்ளது என்றே அ.தி.மு.க.,வின் முக்கிய சாட்சியான மகாலிங்கத்திற்கு தெரியவில்லை. அவர், மொபைல் போன் மூலம் துரைசாமிக்கு தகவல் கொடுத்ததாகக் கூறுகிறார். அதே நேரத்தில், துரைசாமியின் மொபைல் போன் எண் தெரியாது என்கிறார். இதுவே, அந்த சாட்சி பொய்யானது என்பதை நிரூபிக்கிறது.
ஈஸ்வரி மருத்துவமனையில் பெண்கள் கையில் பணம் வைத்திருந்ததாகக் கூறுகின்றனர். ஆனால், பணம் பெற்றதாகக் கூறப்படும் ஒரு பெண்ணைக் கூட சாட்சியாக முன்னிறுத்தவில்லை. மனுதாரர் சமர்ப்பித்த வீடியோ ஆதாரம் முழுமையானது அல்ல. அது ஒரு சிறிய பகுதி மட்டுமே. அந்த வீடியோவை எடுத்த செய்தியாளரை ஏன் விசாரணைக்கு அழைக்கவில்லை? பிரசாரத்தின் போது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக, ஸ்டாலின் மனைவி துர்கா கூறியது தேர்தல் விதிமீறல் ஆகாது.இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
ஏற்கனவே, ஒரு நாள் முழுதும் சைதை துரைசாமி தரப்பு வாதங்களை முன்வைத்த நிலையில், இன்னும், ஸ்டாலின் தரப்புக்கு, 30 நிமிடமும், சைதை துரைசாமி தரப்புக்கு, ஒரு மணி நேரம் மட்டுமே வாதங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அதன்பின், தீர்ப்பு ஒத்திவைக்கப்படும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினர்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த வழக்கை இன்னுமா நீதி மன்றம் நடத்தி வருகின்றது சொல்வதற்கே வெட்கமாக இருக்கிரது இதுபோன்று வழக்குகள் பல பல ஆண்டுகள் சென்றால் மக்களுக்கு எப்போது நீதி கிடைக்கும் எப்போது அநீதி ஒழியும் வழியே இல்லை
நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்கும் இதுபோன்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி வழக்குகளை நீதிமன்றம் ஏற்கக்கூடாது. அப்படிப்பட்ட அரசியல்கட்சிகளை நீதிமன்றம் கடுமையாக எச்சரிக்கவேண்டும்.மேலும்
-
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 8 மாதங்களில் 924 ' என்கவுன்டர்' மனித உரிமை ஆணையம் அதிர்ச்சி
-
பட்டாசு கடையில் தீ விபத்து சீனாவில் 12 பேர் பலி
-
தேர்தலுக்கு பின்னரே ஆட்சியில் பங்கு
-
'கோவை மக்கள் தங்கள் ஊரை தவிர பிற ஊர்களை கெடுப்பர்' தயாநிதி பேச்சுக்கு பா.ஜ., கண்டனம்
-
'சீட்' கேட்டு டில்லி வர வேண்டாம் தமிழக பா.ஜ.,வினருக்கு எச்சரிக்கை
-
நல்லா போடுறாங்க 'சீன்'