மணலி மண்டலக் குழுத் தலைவருக்கு திடீர் உடல்நலக்குறைவு: சென்னை மாநகராட்சியில் பரபரப்பு
சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று (பிப்ரவரி 18) தாக்கல் செய்யப்பட்ட போது, மணலி மண்டலக் குழுத் தலைவர் ஏ.வி. ஆறுமுகத்திற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு கோடை காலத்தில் மோர் வழங்குதல், மெரினாவில் ரோப் கார் சேவை மற்றும் பசுமை சென்னை திட்டம் போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.
சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா 2026--27 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, மணலி மண்டலக் குழுத் தலைவர் ஆறுமுகத்திற்கு திடீரென மயக்கம் மற்றும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த சக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மேலும்
-
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 8 மாதங்களில் 924 ' என்கவுன்டர்' மனித உரிமை ஆணையம் அதிர்ச்சி
-
பட்டாசு கடையில் தீ விபத்து சீனாவில் 12 பேர் பலி
-
தேர்தலுக்கு பின்னரே ஆட்சியில் பங்கு
-
'கோவை மக்கள் தங்கள் ஊரை தவிர பிற ஊர்களை கெடுப்பர்' தயாநிதி பேச்சுக்கு பா.ஜ., கண்டனம்
-
'சீட்' கேட்டு டில்லி வர வேண்டாம் தமிழக பா.ஜ.,வினருக்கு எச்சரிக்கை
-
நல்லா போடுறாங்க 'சீன்'