அநியாயமான அழுத்தம் தருகிறார்; டிரம்ப் மீது உக்ரைன் அதிபர் புகார்
ஜெனிவா: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் நாட்டுக்கு அநியாயமான அழுத்தங்களை கொடுப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நான்காண்டுகளை எட்டிய நிலையில், அது முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. இரு தரப்பில் மோதல்கள் நீடித்தாலும், மறுபுறம் தீவிரமான அமைதி பேச்சுக்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
போரை நிறுத்த அமெரிக்க மத்தியஸ்தம் செய்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் நடைபெற்ற இரு சுற்று பேச்சுகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்த மூன்றாவது சுற்று பேச்சு ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்று வருகிறது.
உக்ரைன், 'நேட்டோ' எனப்படும் ராணுவ ஒத்துழைப்புக்கான அமைப்பில் இணைவதை கைவிட வேண்டும், ராணுவ அளவை கணிசமாக குறைக்க வேண்டும், ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நான்கு பகுதிகளில் இருந்து உக்ரைன் படைகள் வெளியேற வேண்டும் என்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வலியுறுத்தி வருகிறார். மேலும் ரஷ்யா விரும்பும் சில பகுதிகளையும் விட்டு கொடுக்குமாறு நிர்ப்பந்தித்துள்ளார்.
ரஷ்யாவின் இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழுத்தம் கொடுப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
பேச்சுக்கு மத்தியில் அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஜெலன்ஸ்கி கூறியுள்ளதாவது: இது நியாயமான பேச்சாக இல்லை. ரஷ்யாவுடன் பணிந்து போக வேண்டும் என்ற வகையில் பேச்சு நடக்கிறது. டிரம்ப் தொடர்ந்து உக்ரைனை மட்டுமே சமரசம் செய்ய வலியுறுத்தி பொதுவெளியில் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
ஆனால், ரஷ்யாவின் மீது அதே அளவு அழுத்தத்தை ஏற்படுத்தவில்லை. ரஷ்யா ஆக்ரமித்துள்ள பகுதிகளுக்கு அப்பால் எந்த பிரதேசத்தையும் விட்டுக் கொடுப்பது உக்ரைன் மக்களால் ஒருபோதும் மன்னிக்கப்படாது. அவர்கள் என்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்படி அழுத்தம் கொடுத்துதான் எளாண் மாஸ்க்கு அவ்ரடமிருந்து விலகி தூரத்திற்கு சென்றுவிட்டார் நீ என்னவோ அவர் உனக்கு சாத்தித்து விடுவார் என்று எண்ணி மிக அருகில் சென்று ஏமாந்து விட்டாய் இப்போதும் ஒன்று குறைந்து போயிடவில்லை இனிமேலாது டிரம்பின் அருகில் செல்லாதே எட்டியே இரு ரஷ்ய அதிபர் புடின்கூட சமரசம் செய்து கொஞ்சம் விட்டுக்கொடுத்து நாட்டை ஆள்வதற்கு அரசியல் செய் அதுதான் உனது சாமர்த்தியாம்
நோபல் பரிசு அவருக்கு அவசரமாக வேண்டும் அழுத்தம் கொடுத்தால் தானே சீக்கிரம் போரை நிறுத்தி பரிசு வாங்கமுடியும் அதான்
உமக்கு அழுத்தம் மட்டும் போதாது, பதவியில் இருந்தும் நீக்கனும்
நல்லவேளை வெறும் அழுத்தம்தான். அதிக வரி விதிப்பார் அழுத்தங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால். பார்த்து, யோசித்து ஒரு முடிவு எடுங்கள் - அழுத்தமா அல்லது அதிக வரியா என்று.மேலும்
-
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 8 மாதங்களில் 924 ' என்கவுன்டர்' மனித உரிமை ஆணையம் அதிர்ச்சி
-
பட்டாசு கடையில் தீ விபத்து சீனாவில் 12 பேர் பலி
-
தேர்தலுக்கு பின்னரே ஆட்சியில் பங்கு
-
'கோவை மக்கள் தங்கள் ஊரை தவிர பிற ஊர்களை கெடுப்பர்' தயாநிதி பேச்சுக்கு பா.ஜ., கண்டனம்
-
'சீட்' கேட்டு டில்லி வர வேண்டாம் தமிழக பா.ஜ.,வினருக்கு எச்சரிக்கை
-
நல்லா போடுறாங்க 'சீன்'