சாலைப்பணிக்கு பூமி பூஜை

அவிநாசி அருகே கருமாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட 3வது வார்டு எஸ்.பி. காலனியில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் ரோடு அமைக்கும் பணிக்காக பூமி பூஜை நடந்தது. அவிநாசி எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெற உள்ள பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி துவக்கி வைத்தார்.

ஊராட்சி முன்னாள் தலைவர் பூங்கொடி, பொறுப்பாளர்கள் மனோகரன், வழக்கறிஞர் விஜய் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement