இலவசம் கொடுப்பதற்கு பதில் வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்; தமிழக மின் வாரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டிப்பு
நமது டில்லி நிருபர்
மக்களுக்கு இலவசங்களை கொடுப்பதற்கு பதில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என தமிழக மின் வாரியம் தொடர்புடைய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவது தொடர்பான தமிழ்நாடு தொடர்பான மின் வாரிய வழக்கு இன்று (பிப்ரவரி 19) சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்ஷி, விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நாடு முழுவதும் வழங்கப்படக்கூடிய இலவசத் திட்டங்கள் தங்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுக்கிறது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
* இலவச மின்சாரம் என்பதை தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பெரிய அளவில் கொடுத்து வருகிறீர்கள் மின்சார கட்டணம் செலுத்துவதற்கு வசதி உள்ளவர்கள் கூட இந்த இலவச மின்சாரத்தை பெறுகிறார்கள்?
* இலவசம் கொடுப்பதற்கு பதில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.
* நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் இத்தகைய கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.
* நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் வருவாய் பற்றாக்குறை உள்ள மாநிலங்கள் இலவசங்களை வழங்குகின்றன.
* இப்படி செய்வதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைபடுகிறது. அனைவருக்கும் இலவச உணவு, இலவச மிதிவண்டிகள் மற்றும் இலவச மின்சாரம் வழங்குவதற்குப் பதிலாக வேலைவாய்ப்புகளை உருவாக்க மாநிலங்கள் பாடுபட வேண்டும்.
* இந்தியாவில் நாம் என்ன மாதிரியான கலாசாரத்தை வளர்த்து வருகிறோம்?
* அரசின் சலுகைகளை பெறத் தகுதியானவர்கள் மட்டுமின்றி அனைத்து தனிநபர்களும் பெறுவது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல.
* 100 யூனிட் மின்சாரம் வழங்க தமிழக அரசுக்கு நிதி எங்கிருந்து கிடைக்கிறது?
* அனைத்து அரசியல் கட்சிகளும் இதுபோன்ற இலவச அறிவிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வாசகர் கருத்து (33)
நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே) - திருநெல்வேலி சீமை,இந்தியா
20 பிப்,2026 - 10:57 Report Abuse
தமிழ்நாட்டில் இலவசங்கள் இல்லையென்றால் திமுகவும் இல்லை அதிமுகவும் இல்லை. 0
0
Reply
வி.ஐ.பி - ,
20 பிப்,2026 - 09:16 Report Abuse
ரெண்டு கோடி வேலை குடுக்கறோம்னு சொன்ன ஆளுங்களை ரேசன் கார்டுக்கு இலவச அரிசிக்கு பதில் வேலை குடுக்கச் சொல்லுங்க எசமான். 0
0
Reply
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
19 பிப்,2026 - 22:16 Report Abuse
மீன் கொடுப்பதற்கு பதிலாக தூண்டில் கொடுத்து உதவும்படி கம்யூனிஸத்தில் கூறுவார்கள் . 0
0
Reply
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
19 பிப்,2026 - 22:14 Report Abuse
இலவச மின்சாரம் சூர்ய ஒளியில் இருந்து சோலார் பேனல் மூலம் கிடைக்கிறது . 0
0
Reply
ஆரூர் ரங் - ,
19 பிப்,2026 - 22:07 Report Abuse
வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துவிட்டால் 200 உ.பி ஸ் பற்றாக்குறை வருமே. 0
0
Reply
D Natarajan - CHENNAI,இந்தியா
19 பிப்,2026 - 21:36 Report Abuse
மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6000 rs வழங்குகிறது. இது வரை சுமார் 1 லக்ஷம் கோடி விரயம். இதை நதி இணைப்புக்கு செலவிட்டிருந்தால் கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை மலர்ந்திருக்கும் 0
0
Sivak - Chennai,இந்தியா
19 பிப்,2026 - 22:13Report Abuse
உழைக்கும் விவசாயிகளுக்கு மானியம் கொடுப்பதும் ... வெட்டியாக ஊர் சுற்ற இலவச பஸ் ஆயிரம் ரூபாய் கொடுப்பதும் ஒண்ணா கோபால் 0
0
Reply
visu - tamilnadu,இந்தியா
19 பிப்,2026 - 20:13 Report Abuse
100 யூனிட் குறைவாக பயன்படுத்துவர்களுக்கு மட்டும் இலவசம் கொடுக்கலாம் அதன் மூலம் மற்றவர்களுக்கு கட்டணத்தை குறைக்கலாம் அதை விட்டு வோட்டு அரசியலுக்காக அனைவருக்கும் இலவசம் கொடுக்கிறார்கள் மின்வாரியம் இழப்பு ஏற்படுகிறது அதை மக்கள் வரிப்பணம் மூலம் ஈடுகட்டுகிறார்கள் அதனால் வரி உயர்கிறது அரசு ஊழியர் ஊதியமும் அரசின் வருமானத்தில் இத்தனை % மட்டுமே இருக்க வேண்டும் என்று சட்டம் வேண்டும் 0
0
Reply
Dharmavaan - Chennai,இந்தியா
19 பிப்,2026 - 19:36 Report Abuse
எல்லா இலவசங்களும் நிறுத்தப்பட வேண்டும் /மினாரிட்டி சலுகைகள்/ அரசியல்வாதி சலுகைகள் முழுதும் நிறுத்தப்பட வேண்டும்.இலவசம் & மத ரீதியான சலுகைகள் அறிவிக்கும் கட்சிகள் தேத்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் . 0
0
Reply
N Sasikumar Yadhav - ,
19 பிப்,2026 - 18:54 Report Abuse
இந்த இலவசம் கொடுத்த பெருமையெல்லாம் அஞ்சா நெஞ்சன் அண்ணன் அழகேரி திருமங்கலத்தில் சோதனைக்காக நடப்பட்ட செடி இப்போது தளபேதியின் இந்த இந்துமத துரோக இந்துமத விரோத மானங்கெட்ட திராவிட மாடல் ஆட்சியில் விஷ விருட்சமாக வளர்ந்து நாட்டையே கெடுத்து கொண்டிருக்கிறது 0
0
Reply
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
19 பிப்,2026 - 18:02 Report Abuse
இந்த வியாதி 2006லேயே தொடங்கிவிட்டது . ... தமிழகத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு தேர்தலிலும் எல்லா கட்சிகளும் வித விதமாக இலவசங்களை கொடுத்து மக்களை பழக்கி விட்டனர் . ... 2006லிருந்து உச்ச நீதிமன்றம் என்ன செய்தது என்பதற்கும் மௌனமே பதிலாகும் . .... 0
0
Reply
மேலும் 22 கருத்துக்கள்...
மேலும்
-
பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா; டில்லியில் ஒப்பந்தம் கையெழுத்து
-
கடலோரப் பாதுகாப்பு சவால்களை சமாளிக்க கூட்டு முயற்சி தேவை; ராஜ்நாத் சிங்
-
ஒரே தண்டவாளத்தில் வந்த இரு ரயில்கள்... சென்னையில் பரபரப்பு
-
பணி நியமனத்தில் முறைகேடு; அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு
-
பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை; அதிமுக, பாஜ புறக்கணிப்பு
-
தங்கம் விலை இன்றைய நிலவரம்; சவரனுக்கு ரூ.640 குறைவு
Advertisement
Advertisement