ஒரே தண்டவாளத்தில் வந்த இரு ரயில்கள்... சென்னையில் பரபரப்பு

2

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீதியில் பயணிகள் ரயிலில் இருந்து குதித்து வெளியே ஓடினர்.

கோடம்பாக்கம் ரயில் நிறுத்தத்திற்கு சென்னை கடற்கரை நோக்கி ரயில் ஒன்று வந்தது. இதைத்தொடர்ந்து, சிறிது நேரத்தில் தாம்பரம் செல்லும் ரயிலும் அதே தண்டவாளத்தில் வந்தது. இதனால், ரயில்நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் இருப்பதை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட லோகோ பைலட், ரயிலை பாதியிலேயே நிறுத்தினார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் இருப்பதை உணர்ந்த பயணிகள், பீதியில் ரயிலில் இருந்து குதித்து வெளியே ஓடினர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement