காசா அமைதி திட்டம் பற்றி பிரதமர் மோடியிடம் பேசினேன்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்

6

வாஷிங்டன்: ''நான் பிரதமர் மோடியிடம் பேசினேன். அவர் காசா அமைதித் திட்டம் குறித்து ஆர்வத்துடன் இருக்கிறார் '' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: ரஷ்யாவும், சீனாவும் காசா அமைதி வாரியத்தில் இணையும் என்று நான் நினைக்கிறேன். ஈரான் எங்களுடன் சேர வேண்டிய நேரம் இது. அவர்கள் எங்களுடன் இணைந்தால், சிறப்பாக இருக்கும். இல்லையென்றால், அதுவும் சிறப்பாக இருக்கும். பிரதமர் மோடியிடம் பேசினேன். அவர் காசா அமைதித் திட்டம் குறித்து ஆர்வத்துடன் இருக்கிறார்.



காசா அமைதி வாரியத்தை வழிநடத்த நிதி மற்றும் வெளிப்படைத்தன்மை கொள்கைகள் குறித்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அமைதி வாரிய உறுப்பினர்களிடமிருந்து காசா நிவாரண நிதிக்கு மொத்தம் 7 பில்லியன் டாலர்களுக்கு மேல் அளிக்க உறுதி எடுக்கப்பட்டது. நாங்கள் ஐநாவுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். ஐநா பொதுச் செயலாளருடன் எனக்கு நல்ல உறவு உள்ளது.


எனது கடைசி உரையில் அவர்கள் எனது டெலிப்ராம்ப்டரை அணைத்துவிட்டார்கள். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க முடியாது. பி-2 குண்டுவீச்சை நான் ஒருபோதும் மறக்கவில்லை. அது ஈரானின் அணுசக்தி திறனை முற்றிலுமாக அழித்துவிட்டது. திடீரென்று மத்திய கிழக்கில் எங்களுக்கு அமைதி ஏற்பட்டது.


எனக்கு அதிபர் புடின் மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோருடன் நல்ல உறவு உள்ளது. நான் சீனாவுக்குச் செல்வேன். எனக்கு இளம் மற்றும் அழகான ஆண்கள் பிடிக்காது. ஆனால் பெண்களை எனக்கு பிடிக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

Advertisement