கேரளா ரயில்வே ஸ்டேஷனில் பெண் அமைச்சர் மீது தாக்குதல்; இளைஞர் காங். அத்துமீறல்
கண்ணூர்: கேரளாவில் இளைஞர் காங்கிரசார் போராட்டத்தின் போது தாக்குதல் நடத்தியதில் அமைச்சர் வீணா ஜார்ஜ் காயம் அடைந்தார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
கேரளாவில் சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜூக்கு எதிராக இரிக்கூர், பைய்யாவூர், தலசேரி உள்ளிட்ட பல பகுதிகளில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். கேரள அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளின் போது அலட்சியம் காட்டுவதை கண்டித்து இந்த போராட்டத்தை அறிவித்து இருந்தனர். அதன்படி போராட்டமும் நடந்து கொண்டு இருந்தது.
அப்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் திருவனந்தபுரம் செல்வதற்காக கண்ணூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார். அதற்கேற்ப அவரின் பயணத்திட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வந்தே பாரத் ரயிலில் செல்ல ஒன்றாவது நடைமேடையில் வீணா ஜார்ஜ் காத்திருந்தார்.
ரயிலில் ஏற முயன்ற அந்த நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த இளைஞர் காங்கிரசார் கறுப்புக் கொடிகளை பிடித்தபடி எதிர்ப்பு முழக்கமிட்டு அமைச்சரை அணுக எத்தனித்தனர். அப்போது போராட்டக்காரர்களில் சிலர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் கை கலப்பும் உண்டாக, வீணா ஜார்ஜ் கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.
பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசார், அமைச்சர் வீணா ஜார்ஜை போராட்டக்காரர்களிடம் இருந்து மீட்டு,கண்ணூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
அமைச்சர் மீதான தாக்குதலை அறிந்த முதல்வர் பினராயி விஜயன் இந்த சம்பவத்தை கண்டித்து உள்ளார். ஒரு பழம்பெரும் கட்சியின் வருந்தத்தக்க அரசியல் நடவடிக்கை, இது மாணவர் அமைப்பினர் போராட்டம் அல்ல, வன்முறையாளர்களின் வெறித்தனம் என்று கூறி உள்ளார்.
Is this the shop of "love and affection"? Mohabbat ka tukkan
காங்கிரஸ் கட்சியின் பாகிஸ்தான் பங்களாதேஷ் சகவாசம் வன்முறையில் ஈடுபடச் செய்வது வியப்புக்குரியது அன்று.....பதவி வெறி ஏற ஏற குண்டு வீசும் நிலைக்கு கூட போவார்கள்....ஒரு இரண்டு நிகழ்வுகள் அப்படி நடந்தால் பின்னர் அந்த கட்சியை முற்றிலும் தடை செய்வது சுலபம்....
பதவி வெறி ,,காங்கிரஸின் மன நோயாக மாறி முற்றுகிறது.
ஒருவேளை எ ஐ மாநாட்டின்போது டெல்லியில் காங்கிரஸ் காரர்களின் அட்டகாசம் போலீஸால் தடுக்கப்படாமல் இருந்திருந்தால். இது தான் நடந்திருக்கும். பதவி அதிகாரம் இல்லாமல் காங்கிரஸ் காரர்கள் பைத்தியக்காரனுங்களாக ஆகிவிட்டார்கள் போலும்.
அங்கேயும் உன் வேலையை காட்டி விட்டாயா... நாடு முழுவதும் இருந்த கான் கிராஸ் கட்சி உன் குடும்பத்தால் அழிந்து கொண்டு வருகிறது.... அதனை முற்றிலும் அழிக்காமல் விடமாட்டாய் போல ???மேலும்
-
இந்தியா - இஸ்ரேல் இடையே கையெழுத்தாகிறது முக்கிய ஒப்பந்தங்கள்!: மோடியை நேரில் வரவேற்றார் பிரதமர் நெதன்யாகு
-
சுரங்க துறை அதிகாரி வீட்டில் ரூ.4.27 கோடி பணம் பறிமுதல்
-
உள்ளாடை வாங்க 50 அதிகாரிகளை ஏவிய பி.எஸ்.என்.எல்., இயக்குநர்: 'வெட்டி பந்தா'வுக்கு மத்திய அரசு கண்டனம்
-
நேற்றைய போராட்டம்: கிராம உதவியாளர்கள் 'காத்திருப்பு': தொடர்கிறது கவுரவ விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு
-
'நோட்டா' நடைமுறை வந்தபின் தலைவர்களின் தரம் உயர்ந்துள்ளதா?: சுப்ரீம் கோர்ட் அதிரடி கேள்வி
-
வெயில் அதிகரிக்கும் நேரத்தில் குடும்ப தொற்றாகிறது காய்ச்சல்