ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரியில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் துவங்கியது
புதுச்சேரி: புதுச்சேரி ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரி சார்பில், விலங்கு இயல்பியலின் உருவெடுக்கும் கோட்பாடுகள், புதுமையையும் நிலைத்திரு தன்மையையும் மறு உருவாக்குதல் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடந்தது.
ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் சொசைட்டி ஆப் அனிமல் பிசியாலஜிஸ்ட்ஸ் ஆப் இந்தியா ஆகியன இணைந்து நடத்தும் மூன்று நாள் சர்வவேத அளவிலான கருத்தரங்கின் துவக்க விழா, அப்துல் கலாம் கலையரங்கில் நேற்று நடந்தது.
கருத்தரங்கின் அமைப்பு செயலாளர் நைனன் ஜேக்கப் வரவேற்றார். அரசு செயலர் யாசின் முகமது சவுத்ரி, கருத்தரங்கினை துவக்கி வைத்து பேசினார்.
ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் முருகவேல், கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறை இயக்குனர் லதா மங்கேஷ்கர் வாழ்த்தி பேசினார்.
டாக்டர் மதன், சங்க தலைவர் ரஸ்தோகி ஆகியோர் நோக்கவுரையாற்றினர்.
பொதுச் செயலாளர் சைலேஷ் இங்கோல் மற்றும் நிர்வாகிகள் இத்துறையின் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினர். மாணவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். டாக்டர் நிகில் குமார் தேஜ் நன்றி கூறினார்.
நாளை 27 ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த சர்வதேச கருத்தரங்கில் உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து வந்த 100க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்க உள்ளனர்.
மேலும்
-
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்; சொல்கிறது ஈரான்
-
மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
-
உள்நாட்டு வன்முறை சம்பவங்களில் இந்தியாவுக்கு தொடர்பில்லை: கனடா
-
அணுசக்தி ஒப்பந்த விவகாரம்; அமெரிக்கா - ஈரான் இடையே இன்று 3வது சுற்று பேச்சுவார்த்தை
-
காத்திருப்பு போராட்டம்
-
நிழற்குடை சேதம்