வேணுகோபால சுவாமி கோவிலில் நாளை தேரோட்டம்



நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டையில் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருக்கல்யாண ரதோற்சவ விழா ஆண்டுதோறும் நடக்கும். இந்தாண்டுக்கான விழா, நேற்று தொடங்கியது. நேற்று மாலை, 6:30 மணிக்கு யாக சாலை பூஜை தொடங்கின. இன்று காலை கொடியேற்றம் நடக்கிறது.



அதை தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு, 7:00 மணிக்கு பாரிவேட்டை குதிரை வாகன ஊர்வலம் நடக்கிறது. நாளை மதியம், திருத்தேரோட்டம் தொடங்குகிறது. 3 இரவு சத்தாபரணம் நடக்கிறது. அப்போது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சுவாமி ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்
குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertisement