ஈரானில் பயங்கரவாத இலக்குகளை தொடர்ந்து தாக்குவோம்: நெதன்யாகு அறிவிப்பு

2

ஜெரூசலம்: அடுத்து வரும் நாட்களில் ஈரானில் உள்ள ஆயிரக்கணக்கான பயங்கரவாத இலக்குகளை தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி உள்ளார்.

இஸ்ரேல், அமெரிக்க படைகளின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் ஆட்சியாளரும், மதகுருவான கமேனி கொல்லப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் ராணுவமும் வெளியிட்டு உள்ளது. கமேனி இறப்பை முதலில் மறுத்த ஈரானும் பின்னர் அதை ஒப்புக் கொண்டது.

இந் நிலையில் அடுத்து வரக்கூடிய நாட்களில் ஈரானில் உள்ள ஆயிரக்கணக்கான பயங்கரவாத இலக்குகளை தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி உள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் விடியோ ஒன்றை வெளியிட்டு பேசி உள்ளார். அந்த விடியோவில் கூறி உள்ளதாவது;

ஈரான் நாட்டு மக்கள் கொடுங்கோன்மையின் தொடர்புகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் சூழலை நாங்கள் உருவாக்குவோம். ஈரான் மக்கள் இந்த வாய்ப்பை நழுவ விட வேண்டாம். ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒருமுறை மட்டுமே இப்படிப்பட்ட வாய்ப்பு கிட்டும்.

உங்களுக்கான தருணம் வெகு விரைவில் வரும். உங்களின் வாழ்க்கை சூழலை கசப்பாக்கிய ஆட்சியை வீழ்த்த வீதிக்கு வரவேண்டிய தருணம். உங்களின் துன்பங்கள், தியாகங்கள் வீண் போகாது. நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த உதவி வந்துவிட்டது. வரலாற்றுப் பணிக்காக ஒன்றுபட வேண்டிய நேரம் இது.

ஈரான் நாட்டு குடிக்களே, ஆட்சியை தூக்கி எறிந்து உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்க உங்களின் படைகளை ஒன்றிணைக்க வேண்டிய தருணம்.

இவ்வாறு விடியோவில் நெதன்யாகு பேசி உள்ளார்.

Advertisement