ஈரானின் புதிய ஆட்சியாளராக அயதுல்லா அராபி நியமனம்

6


டெஹ்ரான்: ஈரான் ஆட்சியாளர் கமேனி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், புதிய இடைக்கால ஆட்சியாளராக அயதுல்லா அராபி நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆட்சியாளரும், மதகுருவுமான கமேனி கொல்லப்பட்டார். டிரம்ப் கூறியபடி கமேனியை கொன்று விட்டாலும், ஈரான் மீதான தாக்குதல் இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்று அமெரிக்கா அறிவித்தது. ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. 7 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரானின் இடைக்கால ஆட்சியாளராக அயதுல்லா அலிரேசா அராபி நியமிக்கப்பட்டார். ஈரானின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, புதிய தலைவர் தேர்வு செய்யும் வரை, இவரது தலைமையிலான கவுன்சில், நாட்டை வழிநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கவுன்சிலில் அதிபர் மசூத் பெசெஷ்கியன், தலைமை நீதிபதி கோலாம் ஹொசைன் மொஹ்சேனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement