முத்துராமலிங்க தேவர் மணிமண்டபத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு; நயினார் கண்டனம்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் முத்துராமலிங்க தேவரின் மணிமண்டபத்தில் பெட்ரோல் குண்டுவீசிய மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை; திருநெல்வேலி மாவட்டம் திம்மராஜபுரம் பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மணிமண்டபத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
நாடு போற்றும் அருந்தலைவரின் மணிமண்டபத்தில் எந்தவொரு பயமுமின்றி துணிகரமாக குண்டு வீசும் அளவிற்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது வெட்கக்கேடானது. தேசியத்தையும் தெய்வீகத்தையும் தன்னிரு கண்களாகக் கொண்டு போற்றிய மாபெரும் தலைவரின் புகழை அழிக்க முயற்சித்த இந்த இழிசெயலைத் தடுப்பதை விடுத்து, முதல்வரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏவல்துறை மிதந்து கொண்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
இனியும் காலதாமதம் செய்யாமல், திமுக அரசு உடனடியாக விழிப்புடன் செயல்பட்டு, முத்துராமலிங்க தேவர் மணிமண்டபத்திற்குக் களங்கம் ஏற்படுத்த முனைந்த சமூக விரோதிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
@block_B@
மறியல்
திருநெல்வேலி திம்மராஜபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவப்படத்திற்கு மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் அரசு பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.block_B
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈரானுக்கு சீனா, ரஷ்யா, வட கொரியா நாடுகள் ஆதரவு; இறையாண்மை மீறிய தாக்குதல் எனவும் கண்டிப்பு
-
ஈரான் நாட்டு போர் விமானங்களை தாக்கி அழித்தது இஸ்ரேல்
-
ஈரான் பதில் தாக்குதல்: இஸ்ரேலில் 9 பேர் பலி
-
மத்திய கிழக்கில் போர் பதற்றம் ; பிரதமர் மோடி இன்று இரவு முக்கிய ஆலோசனை
-
திமுகவால் தமிழகத்துக்கு என்ன கிடைத்தது ? இபிஎஸ் கேள்வி
-
மத்திய கிழக்கில் தொடரும் போர்; ஹோர்முஸ் நீரிணையில் இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
Advertisement
Advertisement