வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி
கரூர்: விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், கரூர் மார்க்கெட்டுக்கு தக்காளி அதிகளவில் விற்பனைக்கு வருவதோடு, விலை வீழ்ச்சியும் அடைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்தாண்டு, டிசம்பரில் மழை பெய்தது. இதனால், குறுகிய கால பயிரான தக்காளியை விவசாயிகள், அதிகளவில் சாகுபடி செய்தனர். இதனால், மாநிலம் முழுவதும் தக்காளி நல்ல விளைச்சல் அடைந்துள்ளது. குறிப்பாக, கரூர் மாவட்டத்துக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலுார் மற்றும் மதுரை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால், தக்காளி விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
கடந்த மாதம் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஒரு கிலோ தக்காளி, 40 ரூபாய் வரை விற்றது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால், கரூர் உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி, 13 ரூபாய் முதல், 15 ரூபாய் வரை விற்றது. தக்காளி விலை குறைவால், இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியும், விவசாயிகளுக்கு கவலையும் ஏற்பட்டுள்ளது.
மேலும்
-
முத்துராமலிங்க தேவர் மணிமண்டபத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு; நயினார் கண்டனம்
-
திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்
-
ஈரானின் புதிய ஆட்சியாளராக அயதுல்லா அராபி நியமனம்
-
துபாய் விமான நிலையத்தில் நேரிட்ட துயரம்; வருத்தத்தை பகிர்ந்த வீராங்கனை பி.வி.சிந்து
-
ஈரானில் பயங்கரவாத இலக்குகளை தொடர்ந்து தாக்குவோம்: நெதன்யாகு அறிவிப்பு
-
மத்திய கிழக்கில் போர் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்