அரசு மகளிர் கல்லுாரியில் 970 மாணவிக்கு பட்டம்

சேலம்: சேலம், கோரிமேட்டில் உள்ள அரசினர் மகளிர் கல்லுாரியில், 24வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. முதல்வர் காந்திமதி வரவேற்றார். தர்மபுரி மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி, இளநிலை பிரிவில், 738 மாணவியர், முதுநிலை பிரிவில், 232 மாணவியர் என, 970 பேருக்கு பட்டம் வழங்கி கவுரவித்தார். இளநிலை பொருளாதாரம், புள்ளியியலில் தலா, 2 பேர், முதுநிலை வரலாற்று பாடத்தில், 5, பொருளாதாரத்தில், 4, நுண்ணுயிரியலில், 2 என, 15 மாணவியர், பல்கலை தரவரிசை பட்டியலில் இடம்பெற்று, தனி பரிசு, துறை சார்ந்த பரிசுகள் பெற்றனர்.


தொடர்ந்து ராமலட்சுமி பேசுகையில், ''பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எனும் பாரதியின் பாடலுக்கு ஏற்ப, எதிர்காலத்தில் மாணவியரும் சட்டங்களை உருவாக்க முடியும். அதற்கான திறமைகளை வளர்த்துக்கொண்டு சமுதாயப்பணி ஆற்றுங்கள்,'' என்றார்.அனைத்து துறை பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

Advertisement