மூதாட்டியை தாக்கிய 3 பேருக்கு 'காப்பு'

தலைவாசல்:தலைவாசல் அருகே மணிவிழுந்தான், ராமானுஜபுரத்தை சேர்ந்த, இளங்கோ மனைவி ஜானகி, 61. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேல்முருகனுக்கும் வண்டிப்பாதை தொடர்பாக பிரச்னை உள்ளது. இந்நிலையில் ஜானகி, அவரது நிலத்தில் கம்பி வேலி அமைத்துள்ளார். அதுகுறித்து வேல்முருகன், அவ-ரது தம்பி இளையராஜா உள்ளிட்ட குடும்பத்தினர் கேட்டு தக-ராறு செய்துள்ளனர்.

தொடர்ந்து ஜானகியை தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, தலைவாசல் போலீசார், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் நேற்று முன்தினம் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து வேல்முருகன், 47, அவரது மகன் மூர்த்தி, 26, இளையராஜா, 46, ஆகியோரை கைது செய்தனர்.

பஸ் டிரைவர் மீது
ஆயுதத்தால் தாக்குதல்
சேலம், மார்ச் 4
சேலம், அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் சங்கர் சிங், 58. தனியார் பஸ் டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு, பழைய பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தபோது, கழுத்தில் கூர்மையான ஆயு-தத்தால், மர்ம நபர் தாக்கியுள்ளார்.
ரத்தம் வெளியேறி மயங்கி கிடந்த சங்கர் சிங்கை, அருகே இருந்-தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement