ஆலையில் கார் மாயம்: 2 ஊழியர் மீது சந்தேகம்

சேலம்,:சேலம், கன்னங்குறிச்சி, நெல்லியாகரடு, சிவா நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 36. இவர், பெயின்டுக்கு பயன்படுத்தும், தின்னர் சில்லரை விற்பனை பேக்கிங் தொழிற்சாலையை, அதே பகு-தியில் நடத்துகிறார்.

அங்கு கடந்த பிப்., 14ல், உத்தரபிரதேசத்தை சேர்ந்த மணிராம், சங்கர் பணியில் சேர்ந்து, அங்கேயே தங்கினர்.நேற்று காலை சந்தோஷ்குமார் வந்தபோது, ஆலையின் வெளிப்-புறம் பூட்டப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்த அவர், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த, ஹூண்டாய் 'க்ரடா' காரை காணவில்லை. அங்கு தங்கியிருந்த மணிராம், சங்கரையும் காணவில்லை. அவர்கள் மீது சந்தேகம் அடைந்த சந்தோஷ்குமார், கன்னங்
குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்ப-திந்து, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் மற்றும் அந்த இரு-வரை தேடுகின்றனர்.

Advertisement