ரூ.2,700 கோடி அமெரிக்க ரேடார்; ஜோர்டானில் தாக்கி அழித்தது ஈரான்
டெஹ்ரான்: அமெரிக்காவின் 2,700 கோடி ரூபாய் மதிப்பிலான 'தாட்' ரேடார் அமைப்பு ஈரானால் அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் மீதும், மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் பதில் தாக்-குதல்கள் நடத்தி வருகிறது. இந்தப் போர் எட்டாவது நாளாக இன்றும் தொடர்ந்தது.
இத்தாக்குதலில், ஜோர்டானில் உள்ள முவாபக் சால்டி விமானப்படை தளத்தில் உள்ள அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் பாதுகாப்பு அமைப்பை இயக்குவதற்கான, 2,700 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ராடார் அமைப்புகளை ஈரான் அழித்துள்ளது.
தென்கொரியா மற்றும் குவாம் உட்பட உலகளவில் அமெரிக்கா எட்டு தாட் அமைப்புகளை கொண்டுள்ளது. ஒவ்வொன்றின் மதிப்பும் 9,000 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதில் உள்ள ரேடாரின் மதிப்பு மட்டும் 2,700 கோடி ஆகும்.
மேலும்
-
பெண்மை போற்றுதும்
-
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துங்கள்; லண்டனில் அமெரிக்க தூதரகம் நோக்கி 5000 பேர் பேரணி
-
நைஜீரியாவில் 300 கிராமவாசிகள் கடத்தல்; ஐ.எஸ்., அட்டூழியம்
-
அமெரிக்காவில் முதலீடு திட்டங்கள்; வெளியேறும் வளைகுடா நாடுகள்
-
திருச்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வேன்: கிறிஸ்டோபர் திலக் உறுதி
-
சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.,க்களும் பெண்களாக இருக்கணும்; ராமதாஸ்