சட்டசபையில் 234 எம்.எல்.ஏ.,க்களும் பெண்களாக இருக்கணும்; ராமதாஸ்
திண்டிவனம்: 'தமிழக சட்டசபை உறுப்பினர்கள் 234 பேரும் பெண்களாக இருக்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில், மகளிர் தின விழா நடந்தது. விழாவில், ராமதாஸ் பேசுகையில், “மகளிர் நாட்டை ஆள வேண்டும்; மகளிரை இழிவுபடுத்திய காலம் போய், மகளிர் மேம்பாட்டுக்காக, மகளிரே திட்டங்களை தீட்டும் காலம் வரவேண்டும். தமிழகத்தில், சட்டசபை உறுப்பினர்கள் 234 பேரும் பெண்களாக இருக்க வேண்டும் என்பது என் ஆசை.
“அது நடக்குமா, சாத்தியமா, ஆண்கள் விடுவார்களா, சட்டம் இடம் கொடுக்குமா என்ற பல்வேறு கேள்விக்குறிகளுக்கு மத்தியில்தான் மகளிர் சமூகம் வாழ்ந்து வருகிறது. மகளிர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்'' என்றார்.
இதையடுத்து, பேட்டியளித்த அவர், “பா.ம.க., கூட்டணி தொடர்பாக, ஒன்றிரண்டு நாட்களில் தெரியவரும். மார்ச் 9ம் தேதி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில், கட்சி தொடர்பான வழக்கு விசாரணையில், நல்லபடியாகவே நடக்கும்” என, தெரிவித்தார்.
போற போக்கு ல
அள்ளி விடுமேலும்
-
பெண்மை போற்றுதும்
-
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துங்கள்; லண்டனில் அமெரிக்க தூதரகம் நோக்கி 5000 பேர் பேரணி
-
நைஜீரியாவில் 300 கிராமவாசிகள் கடத்தல்; ஐ.எஸ்., அட்டூழியம்
-
அமெரிக்காவில் முதலீடு திட்டங்கள்; வெளியேறும் வளைகுடா நாடுகள்
-
திருச்சியை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்வேன்: கிறிஸ்டோபர் திலக் உறுதி
-
ஈரான் போரில் சவுதிக்கு பாகிஸ்தான் ஆதரவு