ரம்ஜான் - வார இறுதி நாள் 100 சிறப்பு பஸ் இயக்கம்

திருப்பூர்:நாளை (21ம் தேதி) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பயணிகள் வசதிக்காக, 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, வாரந்தோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. நடப்பு வாரம் நாளை (21 ம் தேதி) ரம்ஜான் மற்றும், 22ம் தேதி ஞாயிறன்று கோவில்வழியில் இருந்து, 50, மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 20, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்த, 30 என மொத்தம், 90 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. 'பெருந்துறை, பவானி, சேலம், விழுப்புரம் வழியாக சென்னைக்கு இரண்டு நாட்களும் தலா, ஐந்து பஸ்கள் வீதம், பத்து பஸ்கள் இயக்கப்படும். வழக்கமான வழித்தடத்தில் கூட்ட நெரிசல், பஸ்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால், அதற்கேற்ப கூடுதல் பஸ் இயக்க முடிவெடுக்கப்படும்,' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement