பொம்மை முக்கியமில்லை; நூல் யாரிடம் என்பது தான் முக்கியம்; சொல்கிறார் சிதம்பரம்

25


காரைக்குடி: பொம்மலாட்டத்தில், பொம்மை முக்கியமில்லை; நூல் யார் கையில் இருக்கிறது என்பதுதான் முக்கியம் என தே.ஜ., கூட்டணி குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்தார்.


காரைக்குடியில் உள்ள எம்.பி., அலுவலகத்தில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற பிறகு ப.சிதம்பரம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் டில்லி சென்று வருவதில் இருந்தே கூட்டணிக்கு உண்மையான தலைவர் பா.ஜ., தான் என்று தெரிகிறது.

ஒப்புக்காக அதிமுகவை முன் வைக்கிறது. பொம்மலாட்டத்தில், பொம்மை முக்கியமில்லை; நூல் யார் கையில் இருக்கிறது என்பதுதான் முக்கியம். திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எந்த இழுபறியும் இல்லாமல் முடிந்து விட்டது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

Advertisement