ரம்ஜான் பண்டிகையையொட்டி இஸ்லாமியர் சிறப்பு தொழுகை
நாமக்கல்: ரம்ஜான்
பண்டிகையையொட்டி, நாமக்கல் அஞ்சுமனே இஸ்-லாமிய ஜாமியா மஸ்ஜித்
சார்பில், நாமக்கல் பேட்டை பள்ளி-வாசலில் இருந்து, முத்தவல்லி
தவுலத்கான் தலைமையில் திர-ளான இஸ்லாமியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு,
சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தை சென்றடைந்தனர்.
அங்கு ரம்ஜான்
சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். ஜாமியா பள்ளி வாசல் இமாம்
சாதிக்பாஷா, சிறப்பு தொழுகையை நடத்தினார்.இதில், 2,000க்கும்
மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை நடத்-தினர். தொழுகை முடிந்தபின்,
ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து
கொண்டனர். சிறுவர்கள் உள்-ளிட்ட பலரும் புத்தாடை அணிந்து
உற்சாகத்துடன் வாழ்த்துக்-களை பரிமாறி கொண்டனர்.
இதேபோல், நாமக்கல்
திப்பு சுல்தான் மஸ்ஜித் (கோட்டை பள்ளிவாசல்), திருச்சி சாலை மாருதி
நகர், மஸ்ஜித் இ நுாருல் இமான் பள்ளிவாசல், நாமக்கல், மாநகராட்சி
அலுவலகம் எதிரே உள்ள எம்.ஜி., பிட்னஸ் ஜிம் திடல், திருச்சி சாலை,
ஜி.எம்.கே., நகர் திடல் உள்ளிட்ட பல்-வேறு இடங்களில், நடந்த சிறப்பு
தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
மோகனுார்,
ப.வேலுார், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள
மசூதிகளில், ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான
இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.
மேலும்
-
நியமனம்
-
காந்தி மியூசிய கலந்துரையாடல்
-
'மஹா பெரியவர் வாழ்க்கை நமக்கு ஒரு லைப் ப்ளூபிரின்ட்'
-
நாடு வளர்ச்சியடைய நீதித்துறை வளர வேண்டும் வி.ஐ.டி., பல்கலை கருத்தரங்கில் கவர்னர் பேச்சு
-
ரூ.97.73 லட்சம் முத்திரை தீர்வை செலுத்த 'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு பதிவுத்துறை உத்தரவு
-
வீட்டு வேலைக்கு ஆட்களை நியமிக்கும் முன் விசாரணை 645 பேர் மீது குற்ற வழக்கு