காந்தி மியூசிய கலந்துரையாடல்

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் காந்திய சிந்தனைப் பேராசிரியர்களுக்கான பயிற்சி, அடுத்த கல்வியாண்டிற்கான பணிகள் குறித்த கலந்துரையாடல் நடந்தது. கல்வி அலுவலர் நடராஜன் வரவேற்றார்.

பொருளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார்.

டில்லி தேசிய காந்தி மியூசிய இயக்குநர் அண்ணாமலை, பேராசிரியர்கள் ஆண்டியப்பன், ரகுபதி, முத்துராஜா, கபிலன், முத்துலட்சுமி, காந்திய சிந்தனைக் கல்லுாரி முதல்வர் சேதுராக்காயி, தமிழ்நாடு காந்தி நினைவு நிதி செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.

மகாத்மாவோடு தொடர்புடைய தென்னாப்பிரிக்காவிற்கு பேராசிரியர்களை அழைத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

முதல்வர் தேவதாஸ் நன்றி கூறினார்.

Advertisement