தேசிய வேளாண் சந்தை மூலம் ரூ.44.19 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

தர்மபுரி: தர்மபுரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்-துறையில், தர்மபுரி விற்பனைக்குழு செயல்பட்டு வருகிறது.

இதில், விவசாயிகள் விளைவித்த பொருட்கள் வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு, மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம், விற்பனை செய்யப்படுகிறது. கடந்த, 20 அன்று நடந்த மஞ்சள் ஏலத்தில், அதிக-பட்சமாக ஒரு குவிண்டால் பனங்காளி மஞ்சள், 31,109 ரூபாய்க்கு ஏலம் போனது. அதே போல், விரலி, 13,670, உருண்டை, 12,609 ரூபாய் என ஏலம் போனது. இதில், 631 மூட்டைகளில் விவசாயிகள் கொண்டு வந்திருந்த, 35,104 கிலோ மஞ்சள், 44.19 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக, வேளாண் விற்பனை கூட கண்காணிப்பாளர் முரளிதரன் தெரிவித்தார்.

Advertisement