தியாகிகள் தினம்: பகத்சிங், ராஜகுரு, சுக்தேவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
புதுடில்லி: தியாகிகள் தினத்தையொட்டி பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் வீரத்தைப் போற்றி பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத் சிங், சிவராம் ராஜ்குரு மற்றும் சுக்தேவ் தாப்பர் ஆகிய மூவரும் 1931ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். இவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 23ம் தேதி தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தியாகிகள் தினத்தையொட்டி, பகத் சிங் உள்ளிட்டோரை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.
அதில், "பாரத மாதாவின் வீரப்புதல்வர்களான பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரை இன்று நாம் மிகுந்த மரியாதையுடன் வணங்குகிறோம். தேசத்திற்காக அவர்கள் செய்த உயரிய தியாகம் நமது நினைவில் என்றும் நீங்காது இருக்கும். இளம் வயதிலேயே, அசாதாரணமான துணிச்சலையும், இந்தியாவின் சுதந்திரத்திற்காக அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தினர்.
காலனித்துவ ஆட்சிக்கு அஞ்சாமல், தங்கள் உயிரை விட தேசமே மேலானது என்ற உறுதியுடன் தங்களின் பாதையை தேர்ந்தெடுத்தனர். நீதி, தேசபக்தி மற்றும் அச்சமின்மை போன்றவையால் இன்றும் கோடிக்கணக்கான இந்தியர்களின் மனதில் தேசப்பற்று எனும் நெருப்பை மூட்டிக்கொண்டிருக்கின்றன, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
காந்தி, நேரு, ராஜிவ் , இந்திரா போன்ற திருடர்களின் பெயரில் உள்ள - சாலைகள், பள்ளிகள், மருத்துவ மனைகள், அலுவலங்கள் போன்றவற்றை - பகத் சிங்க், சுகதேவ், சாவர்க்கர், நேதாஜி போஸ் போன்றவர்கள் பெயருக்கு உடனே மாற்றுங்கள்.
நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்விட்ட தியாகிகளுக்கு நமது ஆன்ம பூர்வ நமஸ்காரங்களை செலுத்துவோம். நாட்டில் உள்ள தேசதுரோகிகளை நாட்டை விட்டே துரத்த சபதம் எடுப்போம்.
அடித்தே கொல்லப்பட்ட திருப்பூர் குமரன்.. சிறையில் செக்கிழுத்த சிதம்பரம் பிள்ளை... வெள்ளையனைக் கொன்று தானும் தற்கொலை செய்த வாஞ்சிநாதன், தொழுநோய்க்கு ஆட்பட்டிருந்தாலும் விடுதலைப் போராட்டத்தைக் கைவிடாத சுப்ரமணிய சிவா இவர்களையெல்லாம் தியாகிகள் பட்டியலில் சேர்க்க மாடல் அரசு என்ன செய்தது
எப்பொழுதோ செய்ய வேண்டியது. எல்லா அரசுகளும். உதட்டளவில் தான் சுதந்தர உணர்வு போலும். மக்களும் மன்னர்கும் எல்லாம் ஒன்றே.
பகத் சிங்க் மற்றும் சுப்ஹ் தேவ் இருவரும் கம்யூனிஸ்ட்
ஆஹா .....மேலும்
-
தே.ஜ., கூட்டணியில் பா.ஜ., பா.ம.க., அ.ம.மு.க., 27+18+11 ஒதுக்கீடு!
-
கேப்டன் அக்சர் படேலுக்கு பிடிக்கல... * 'இம்பேக்ட்' வீரர் விதிமுறைக்கு எதிர்ப்பு
-
தேசிய உள்ளரங்கு தடகளம் * புவனேஸ்வரில் இன்று ஆரம்பம்
-
ஈஸ்ட் பெங்கால் கோல் மழை * ஐ.எஸ்.எல்., கால்பந்தில்...
-
நீச்சல்: சஜன் பிரகாஷ் 'வெள்ளி' * காமன்வெல்த் விளையாட்டுக்கு தகுதி
-
அண்டா, குண்டா, மிக்சி கொடுத்து ஏமாற்ற நினைக்கின்றனர்: சீமான்