போர் நீண்டாலும் வரி உயர்த்தப்படாது; அமெரிக்கர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் உத்தரவாதம்
வாஷிங்டன்: ஈரானுக்கு எதிரான போரை நடத்துவதற்கு போதுமான நிதி இருப்பதால், கூடுதல் வரி ஏதும் விதிக்கப்படாது என்று அமெரிக்க மக்களுக்கு அதிபர் டிரம்ப் அரசு நிர்வாகம் உத்தரவாதம் அளித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 24 நாட்களாக நீடித்து வருகிறது. இந்தப் போருக்காக அமெரிக்கா பல ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்து வருகிறது. தற்போது, இந்தப் போர் மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதால், அமெரிக்க பார்லிமென்டில் கூடுதல் நிதியை அதிபர் டிரம்ப் அரசு நிர்வாகம் கோர உள்ளது. ஏற்கனவே, பல ஆயிரம் கோடி செலவிடப்பட்ட நிலையில், கூடுதல் நிதி ஒதுக்க எதிர்க்கட்சி மட்டுமின்றி ஆளுங்கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஈரான் போருக்கான நிதியுதவி குறித்து அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் அமெரிக்கர்களுக்கு ஒரு உறுதியளித்துள்ளார். அதாவது, போர் செலவுகளுக்காகப் பொதுமக்கள் மீது கூடுதல் வரிச் சுமைகளைச் சுமத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை, எனக் கூறியுள்ளார்.
அதேபோல, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் கூறுகையில், "தற்போதைய மற்றும் எதிர்கால ராணுவச் செயல்பாடுகளுக்கு கூடுதல் நிதி என்பது மிகவும் அவசியம். போரின் தீவிரத்தைப் பொறுத்து இந்தத் தொகை மாறுபடும்," என்றார். அதிபர் டிரம்பின் அரசு நிர்வாகத்தினரின் இந்தப் பேச்சின் மூலம், அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் விரைவில் முடிவது சந்தேகமாகியுள்ளது.
அப்படியென்றால் எந்த 200 பில்லியன் டாலருக்கு போர்செலவு பட்ஜெட்டை சமர்ப்பித்து இருக்கிறாய்? அந்த பணம் எங்கேருந்து வரும், உன்னோட, டிரம்ப்போட, நெதன்யாஹு கொடுப்பாரா? அமெரிக்க மக்களின் வரஇப்பணத்தில் இருந்து தானே வரணும் ..
உத்ரவாதம் எல்லா நாட்டுக்கும் வேண்டும்
குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு இவருக்கு தானும், தன் குடும்பமும் தான். அதுக்காக நாட்டு மக்களையும், உலக மக்களையும் காவு கொடுப்பார். நம்பாதீங்க
அதான் ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் டாரிப் வரி என்று அவர் இஷ்டத்துக்கு போட்டு எல்லோரையும் துன்புறுத்தி ஆயிடுச்சு இனி அடுத்தவேலை எந்த நாட்டை பறிப்போம் அங்கே உள்ள கனிம வளங்களை அபகரிப்போம் என்று எண்ணி உக்ரைனை அண்டி அதன் அதிபரை அடிமையாக்கினார் பிறகு வென்யுன்சுலா என்ற ஏழை நாட்டை அபகரித்தார் அதன் அதிபரை சிறைபிடித்தார் இன்னும் குறையவே இல்லை அடுத்தது லிஸ்டில் எந்த நாடு இவருக்கு அடிபணிய வேண்டுமோ தெரியவில்லமேலும்
-
ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க கப்பல்களுக்கு ரூ.18 கோடி கட்டணம் வசூலா; ஈரான் மறுப்பு
-
சாடிவயலுக்கு மேலும் ஒரு கும்கி வருகை
-
100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஊர்வலம்
-
சிட்டி கிரைம் செய்திகள் : புகையிலை பொருட்கள் விற்ற நான்கு பேர் கைது
-
மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவன் பலி
-
குடிநீரில் கழிவுநீர் மக்கள் கண்ணீர்