கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது 

கடலுார்: போதை பொருள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கடை பைபாஸ் சுடுகாடு அருகில், ரெட்டிச்சாவடி போலீசார், ரோந்து சென்றனர். அப்போது, போலீசாரை கண்டவுடன் தப்பியோட முயன்றவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம், 250 கிராம் போதை பொருட்கள் இருந்தது.

போலீசார் விசாரணையில், அவர் பரிசமங்கலத்தை சேர்ந்த குரு மகன் ஆதன் 21; என தெரிந்தது. போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.



Advertisement