தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
துாத்துக்குடி: ''தனித்துப் போட்டியிடுவதாக விஜய் சொன்னால், சொல்லி விட்டுப்போகட்டும். புதிதாகத்தானே வந்து இருக்கிறார். தேர்தல் முடிந்தால் தான் அவருக்கு விவரம் தெரியும்,'' என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறினார்.
ஒவ்வொரு கூட்டணியில் கட்சி சேரும் போது, அந்தந்த கட்சி வாக்கு வங்கிற்கு ஏற்ப, அந்த கட்சி பெற்ற வாக்கின் அடிப்படையில் தான், சீட் கொடுப்பார்கள். 31 தொகுதியில் போட்டியிட்டு 33 ஆயிரம் ஓட்டுக்கள் வாங்கி இருக்கிறார். அவருக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும். கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எல்லாம், அந்தந்த கட்சிகள் வாங்கிய ஓட்டுக்களின் அடிப்படையில் தான், சீட் ஒதுக்கீடு செய்யப்படும். அது அதிமுகவிலும் சரி, திமுகவிலும் சரி. அப்படி தான் கடைபிடிக்கிறார்கள்.
அந்த அடிப்படையில் கடைபிடித்தால் பரவாயில்லை. அதிக தொகுதிகள் கேட்டு ஆள் அனுப்பினார். நேரடியாக பேச்சுவார்த்தை இல்லை. நாங்கள் கொடுக்க இயலாது என கூறினோம், அதோடு முடிந்து போனது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இன்று திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூட சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று தான் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தில் பள்ளிக்குச் சென்ற மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ளார்கள். இதுவே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு சிறந்த உதாரணம். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.
கேள்வியும், பதிலும்!
கேள்வி: விஜய் தனித்து போட்டியிடுவதாக கூறி இருக்கிறாரே?
இபிஎஸ்: அவர் சொன்னால் சொல்லிவிட்டு போகட்டும், புதிதாகத்தானே வந்து
இருக்கிறார். தேர்தல் முடிந்தால் தான் அவருக்கு விவரம் தெரியும்..
கேள்வி: அதிமுக - பாஜக கூட்டணியில் முரண்பாடு இருக்கிறது, அதிருப்தி என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கிறார்களே...?
இபிஎஸ்: எந்த அதிருப்தியும் இல்லை. எங்கே அதிருப்தி இருக்கிறது..? ஊடகங்கள்
திரித்துப் போட வேண்டாம். திமுக கூட்டணியில் கடந்த 23 நாட்களாக
பேசிக்கொண்ட இருந்தார்கள்., இரண்டு தினங்களுக்கு முன்பு தான் இறுதி
செய்யப்பட்டது. காங்கிரசுக்கும் திமுகவிற்கும் கிட்டதட்ட 18 நாட்கள்
வார்த்தைப்போர்.
செய்திகள் வந்தன. ஒரு கால கட்டத்தில் திமுக
கூட்டணியில் இருந்து விலகி விடும் நிலைக்கு காங்கிரஸ் வந்து விட்டது.
காங்கிரஸ் தலைவரும், பொறுப்பாளர்களும் பல்வேறு கருத்துக்களை பேசி வந்தனர்.
ஆனால் அதிமுக கூட்டணியில் சிறு கடுகளவு கூட பிரச்னை இல்லை'' என்றார்.
பத்து தடவை தோல்வியை பார்த்தும் பழனிசாமிக்கு இன்னும் விவரம் புரியவில்லை என்று விசில் குஞ்சுகள் விமர்சனம் செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுதான் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை எண்ணிவிட்டால் எல்லா விபரமும் எல்லாருக்கும் தெரிந்து விடுமே...
விஜய் பிரிக்க போகும் ஓட்டுக்கள் யாருக்கு பாதிப்பு என கூடிய சீக்கிரம் தெரிந்து விடும்...
அப்படியே பார்த்தாலும் லோக்சபா தேர்தலில் பிஜெபி முதலிடம் அல்லது இரண்டாவதாக வந்த எல்லாத்தொகுதிகளையும் நியாயமா அவர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டீர்களா?. அதிமுக மூன்று நான்காவதாக வந்த தொகுதியில் கூட நீங்களே போட்டி? அதெல்லாம் பங்காளி அட்ஜெஸ்ட்மென்ட்தானே?
நீர் எவ்வளவு விவரமான ஆளு என்பதை தெரிந்து தான் விஜய் தனித்து போட்டியிடுகிறார்
திமுக தவெக இடையே தான் போட்டி என சொன்ன பிறகும்
அடக்கி வாசிப்பது ஏன்
இவரு எவ்வளவு விவரமான ஆளு என்பதும் தேர்தல் முடிவு சொல்லி விடும் - அண்ணாமலை இல்லை எனில் தேர்தல் வேஸ்ட்மேலும்
-
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
-
விசைபடகு மீனவர்கள் அடாவடியால் நாட்டு படகு மீனவர்கள் பாதிப்பு
-
ஓட்டுச்சாவடி மையங்களில் தேர்தல் அலுவலர் ஆய்வு
-
செங்கல்பட்டு இனிதாக பகுதி
-
திருவள்ளூரில் வேட்புமனு பெறப்படும் இடங்கள்
-
விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட்; மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம்: திமுக தேர்தல் வாக்குறுதி