கடையில் மின் கசிவால் தீரூ.1 லட்சம் மதிப்புக்கு சேதம்



ஈரோடு :ஈரோடு கருங்கல்பாளையம் ஓட்டுகார சின்னையன் வீதியில், வீட்டு உபயோக பொருட்கள், மாஸ்க் விற்பனை கடை உள்ளது. உரிமையாளர் ஜெப்ரி நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி சென்றார். நள்ளிரவில் கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறியது. அப்பகுதி மக்கள் ஜெப்ரிக்கு மொபைல்போனில் தகவல் தெரிவித்தனர். ஜெப்ரி விரைந்து சென்று கடையை திறந்தார்.


மக்கள் உதவியுடன் செயல்பட்டு தீயை அணைத்தனர். தகவலறிந்து ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று, தீ மேலும் பரவாமல் தடுத்தனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது. இதில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக தெரிகிறது.

Advertisement