மனைவி மாயம்கணவன் புகார்

பவானி,பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் குமார், 46; இவரது மனைவி மணிமேகலை, 42; இருவரும் கூலி தொழிலாளர்கள்.


தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். ஓராண்டாக மணிமேகலைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. ஒரு வாரத்துக்கு முன், குமராபாளையத்தில் ஒரு டெய்லர் கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. குமார் புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement