ஓட்டுப்பதிவு பயிற்சி 256 பேர் 'ஆப்சன்ட்'
செங்கல்பட்டு: மார்ச் 29-: திருப்போரூர் ஓட்டுப்பதிவு அலுவலர்கள் பயிற்சியில், 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
இத்தொகுதியின் ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம், பையனுார், ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்லுாரியில், நேற்று நடந்தது.
தலைமை ஓட்டுப்பதிவு அலுவலர் 513 பேர், முதலாம் ஓட்டுப்பதிவு அலுவலர் 955 பேர், இரண்டாம் ஓட்டுப்பதிவு அலுவலர் 573 பேர், மூன்றாம் ஓட்டுப்பதிவு அலுவலர் 559 பேர் என, 2 ஆயிரத்து 600 பேர், பயிற்சிக்கு நியமிக்கப்பட்டனர்.
பயிற்சியில் அனைவரும் பங்கேற்குமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தினர். 2 ஆயிரத்து 344 பேர் பங் கேற்றதில், 256 பேர் பங்கேற்காததாக, பயிற்சி வருகை பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பயிற்சி வகுப்பில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு மதிய உணவு முறையாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பலருக்கு மதிய உணவு கிடைக்காமல் உடல் சோர்வால் அவதிபட்டனர்.
மேலும்
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு
-
ஆண்டிப்பட்டியில் 3ம் முறையாக அண்ணன், தம்பி நேருக்கு நேர் மோதல்
-
திருச்சி சமயபுரம் கோவிலில் மேற்கூரை இடிந்து பெண் பக்தர் பலி
-
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து களமிறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார்?