அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; திருவிக நகர் தொகுதியில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி
சென்னை: அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்தார். இதன் மூலம் சென்னையில் களம் காணும் வேட்பாளர்கள் விபரம் வெளியானது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நிறைவு பெற்று விட்டது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து, அதிமுக 167 இடங்களில் போட்டியிடுகிறது. இந்நிலையில் இன்று (மார்ச் 29) அதிமுக மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இபிஎஸ் வெளியிட்டார்.
* அண்ணாநகர்- கோகுல இந்திரா
* சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி- ஆதிராஜாராம்
* திட்டக்குடி- முருகுமாறன்
* துறைமுகம்- ராயபுரம் மனோ
* விருகம்பாக்கம்- விருகை ரவி
* தியாகராய நகர்- சத்யநாராயணன்
* வேளச்சேரி- அசோக்
* சோழிங்கநல்லூர்- கந்தன்
* டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்- ராஜேஷ்
* வில்லிவாக்கம்- விஜயகுமார்
* திருச்சுழி- ராஜவர்மன்
* ஆலந்தூர்- சரவணன்
* கொளத்தூர்- சந்தான கிருஷ்ணன்
* திருவிக நகர்- பொற்கொடி (மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் மனைவி)
* எழும்பூர்- அபிஷேக் ரங்கசாமி
* ஆலங்குடி- விமல்
ஏற்கனவே முதற்கட்டமாக 23 நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலையும், இரண்டாம் கட்டமாக 127 பேர் பட்டியலையும் இபிஎஸ் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
@block_P@
திரு.வி.க நகரில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி போட்டி என அதிமுக அறிவித்த நிலையில், இபிஎஸ் ஐ சந்தித்த பின் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் எங்களுக்கு ஒரு தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. திருவிக நகர் தொகுதியில் அதிக ஓட்டு பெற்று வெற்றி பெறுவேன். அங்கு பகுஜன் சமாஜ் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது. என்னுடை கணவர் கொலைக்கு நீதி வேண்டும், அதற்காக நான் போட்டியிடுகிறேன், என்றார். block_P
இந்த அம்மாவை விசாரனை வலயத்துக்குள் கொண்டு வர வேண்டும்,
நோட்டு கொடுத்து சீட்டு வாங்கி இருக்கிறார்
பல பேர் நோட்டு வாங்கிக் கொண்டுதான் தி.மு.க கூட்டணிக்கே வருகிறார்கள்.
நம்ம புத்தி நாம செய்யறதை தானே பிரதிபலிக்கும்? மண்டையில் புதுசா ஏதாவது வருமா? முக ஸ்டாலின் கிட்ட பணம் குடுக்காம சீட்டு வாங்குபவன் ஒரே ஒரு பேரை சொல்லு பாப்போம். அதுக்கே அங்கே குடுமிப்படி சண்டை. திமுக வுல இருக்குற அத்தனை பேரும் யோக்கியனுங்க.
கட்சிகள் தாண்டி ரௌடிகள் அவர்கள் குடும்பம் அரசியலில் கோலோச்சுவது நடக்கிறது. பணம் அங்கே தானே இருக்கு?
கிறித்தவரான பொற்கொடி எப்படி தனித் தொகுதியில் போட்டியிட முடியும்?
உங்கள் கூட்டணியின் குறுந்தொகை கிறித்தவராக இருந்துகொண்டே தனித்தொகுதியான திருப்பெரும்புதூரில் எப்படி நின்றார் வென்றார்?
ரவுடியின் மனைவி நாளைய எம்.எல்.ஏ. நாடு வெளங்கிடும் கோவாலு.
ஞாபக மறதி பேராசிரியரே, ஏற்கனவே ஒரு ரவுடியின் மனைவி கட்சியில் சேர்ந்த அன்றே எம்பி சீட் கிடைத்து தேர்தலில் நின்று வெற்றியும் பெற்று ஒன்றிய அரசில் அமைச்சராகவும் உங்கள் கட்சியின் சார்பாக இருந்திருக்கிறார்.
பத்திரிக்கை நிருபரை குவாரியில் தாக்கிய தி.மு.க எம்.எல்.ஏ ரவுடி இல்லாமல் மகாத்மா காந்தியின் அஹிம்சா வழி வந்தவரா?
வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
Yes sir. Aiadmk alliance will sweep polls
இதே வி க நகரில் காங்கிரஸ் போட்டியிடும் என்றால் காங்கிரசின் தலைவர் செ பெருந்தகை பிரச்சாரத்துக்கு கூட வரமாட்டார். அதனால் ஆம்ஸ்ட்ராங் மனைவியின் வெற்றியை உறுதிபட இப்போதே கூறிடலாம்.மேலும்
-
புவிசார் காகித கூழ் பொம்மைகள் மூலம் 100 சதவீத ஓட்டு பதிவு விழிப்புணர்வு
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி