தேனுபுரீஸ்வரர் கோவில் பங்குனி விழா துவக்கம்

தாம்பரம்: தேனுபுரீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திரம் திருக்கல்யாண தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது.

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் பழமைவாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பங்குனி உத்திரம் திருக்கல்யாண தெப்பத் திருவிழா முன்று நாட்கள் விமரிசையாக நடக்கும்.

இந்தாண்டிற்கான விழா, நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு விநாயகர் புஷ்ப அலங்கார சாத்துபடி, தீபாராதனை நடந்தது. இரவு 8:30 மணிக்கு விநாயகர் தெப்பத்தில் எழுந்தருளினார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

இதைத்தொடர்ந்து இன்று சுப்பிரமணியர் தெப்ப உற்சவம், நாளை திருக்கல்யாண உத்சவம் நடைபெற உள்ளது.

Advertisement