திமுக ஆட்சி வெங்காயம் போல... உரித்தால் ஒன்றும் இருக்காது: இபிஎஸ்
சென்னை: வெங்காயம் உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது, கண்ணீர் வரும். அது போல, திமுக ஆட்சியை போலி விளம்பரங்களுக்கு அப்பால் உரித்துப் பார்த்தால், உள்ளே ஒன்றும் இருக்காது என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
இன்றைய தினம், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் நேர்ந்த மக்களின் அன்பு வெள்ளத்தில் நீந்தி சென்று, கூட்டணி வெற்றி வேட்பாளர்களுக்கு பிரசாரம் மேற்கொண்டேன். வெங்காயம் உரிக்க உரிக்க உள்ளே ஒன்றும் இருக்காது. ஆனால் இருப்பவருக்கு கண்ணீர் வரும்.
அதுபோல, திமுக ஆட்சியை போலி விளம்பரங்களுக்கு அப்பால் உரித்துப் பார்த்தால், உள்ளே ஒன்றும் இருக்காது. மக்களின் கண்ணீரும், வேதனையும் மட்டுமே மிஞ்சும். இப்படிப்பட்ட மோசமான ஆட்சி வீழ்வதற்கான நேரம் வந்துவிட்டது.
தனது ஆட்சிக்காலம் முழுவதும் அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியவர், இன்றுஅதிமுக தேர்தல்அறிக்கை-யை காப்பி பேஸ்ட் செய்து திமுக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு உள்ளார். மக்களுக்கு தேவை இவர்களின் ஸ்டிக்கர் ஆட்சியா? இல்லை, நமது ஒரிஜினல் ஆட்சியா?மக்களே, தேர்தல் நாளை மறந்துவிடாதீர்கள்.
இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.
இபிஎஸ் க்கு வெங்காயத்தை பார்த்து பயம்!
எல்லோர் வீட்டிலும் சமையலுக்கு ஆகும் அந்த வெங்காயம்!
வெங்காயத்தின் ஒவ்வொரு லேயரும் ருசியோ ருசி. வெங்காயத்தை குறை சொல்லாதீங்க.
எடப்பாடி அண்ணே இந்த வசனத்தை முதலில் பேசியது அண்ணாமலை அவர்கள்.
உங்கள் கண்ணில் மட்டும் கண்ணீர் வருவது தெரிகிறது
உங்கள் ஆட்சியில் அது கூட இல்லை
உண்மை தான்..வெற்று விளம்பரம் மற்றும் தற்பெருமை.. இதைத்தான் 5 வருடங்கள் விடியல் செய்துள்ளார்
.மேலும்
-
நான் திரள் நிதி வாங்குகிறேன்; நீ திருட்டு நிதியில் கட்சி நடத்துகிறாய்; திமுக மீது சீமான் பாய்ச்சல்
-
ஒன்றுக்கும் உதவாத திமுக ஆட்சி; விரைவில் விடைபெறப் போகிறார் ஸ்டாலின்: விஜய் ஆவேச பேச்சு
-
லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளி கைது
-
அமோக ஓட்டு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல்; ஸ்டாலின், விஜய் வேட்பு மனு தாக்கல்
-
வேட்பாளர் தேர்வில் தேசிய கட்சிகள் திணறுவது ஏன்?