கையெழுத்து பிரச்சாரம்

வடலுார்: குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி, வடலுார் பஸ் நிலையம் எதிரில் வாக்காளர்களுக்கு ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகை அமைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

குறிஞ்சிப்பாடி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி தலைமை தாங்கினார். அனைத்து வாக்காளர்களும் நேர்மையுடன் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுக்கும் நிகழ்வை தொடர்ந்து, 100 சதவீதம் வாக்களிப்போம் என, உறுதி மேற்கொள்வது தொடர்பான பதாகையில் கையெழுத்திடும் நிகழ்வு நடந்தது. நிகழ்வில் வடலுார் நகராட்சி கமிஷனர் ஹேமலதா, குறிஞ்சிப்பாடி தேர்தல் நடத்தும் குழு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement