ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு கவுரவம்
கோவை: இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது. விழாவில் பாரதியார் பல்கலை அளவில் முதலிடம் பெற்றவர்கள், துறை வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாவர்களுக்கு சான்றிதழ், பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மாணவர்களுடன் பெற்றோரும் கவுரவிக்கப்பட்டனர்.
மாணவன் சுப்பிரமணியின் 'கரையாத காதல்', மாணவிகள் கீர்த்தனாவின் 'உரைக்காத வார்த்தைகள்', மீனாட்சியின் 'கவிதைகளும் கிறுக்கல்களும்', வைதேகியின் 'வைதேகி கவிதைகள்' ஆகிய கவிதை நுால்களை அறங்காவலர் சரஸ்வதி, செயலர் பிரியா வெளியிட்டனர்.
மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை விழாவில் அரங்கேற்றினர். கல்லுாரியின் முதல்வர் பொன்னுசாமி, பேராசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தலுக்கு பின் நல்ல செய்தி; மோடி உறுதியால் ராஜா மகிழ்ச்சி
-
வேல் ரிட்டன்... புத்தருக்கு ஓகே...: உதயநிதியின் 'மதசார்பின்மை'
-
கோவையில் காணாமல் போன 'காம்ரேடுகள்'!
-
இன்னும் தேர்தலுக்கு 18 நாட்கள் தான்; அனல் பறக்கும் தினமலர் தேர்தல் களம்!
-
அமித் ஷாவின் நம்பிக்கை மேற்கு வங்கத்தில் கரையேறுமா?
-
விழுப்புரம் மாவட்டத்தில் 88 பேர் மனு தாக்கல்
Advertisement
Advertisement