தகவல் சுரங்கம் தேசிய கடல்சார் தினம்

தகவல் சுரங்கம்


தேசிய கடல்சார் தினம்

இந்தியாவின் முதல் நீராவி கப்பலான 'எஸ்.எஸ்.லாயல்டி' 1919 ஏப்., 5ல் மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது. அதை நினைவுகூறும் வகையில் ஏப். 5ல் தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது. 'கடல்சார் இந்தியா - முன்னேற்றத்திற்கு வலுசேர்த்தல்' இந்தாண்டு மையக்கருத்து. கப்பல் போக்குவரத்து துறையின் மகத்தான பணிகளை சமூகத்திற்கு வெளிப்படுத்துவதே நோக்கம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. வெளிநாட்டு ஏற்றுமதியில் 90% துறைமுகம் வழியே நடைபெறுகிறது. இந்தியாவில் 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன.

Advertisement