அரசு பஸ் கண்டக்டர் தாக்கிய வாலிபர் கைது

புதுச்சத்திரம்: குள்ளஞ்சாவடி அடுத்த புலியூரை சேர்ந்தவர் பரமசிவம் மகன் ராஜ்குமார், 28; அரசு பஸ் தற்காலிக கண்டக்டர். இவர் கடலுார் முதுநகர்-பரங்கிப்பேட்டை வழித்தடம் பஸ்சில் கண்டக்டராக நேற்று முன்தினம் பணியில் இருந்தார்.

இந்நிலையில் இரவு 9:00 மணிக்கு, பஸ் ஆலப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, ஆலப்பாக்கத்தை சேர்ந்த சங்கர் மகன் கிஷோர்,24; மதுபோதையில் ஏன் சர்வீஸ் ரோட்டில் செல்லாமல், மேம்பாலம் வழியாக பஸ் செல்கிறது என கேட்டு, தகராறு செய்து கண்டக்டர் ராஜ்குமாரை தாக்கினார்.

இது குறித்து புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கிஷோரை, கைது செய்தனர்.

Advertisement